×

சுகாதார நிலையத்தில் பிரசவித்த பெண் மீது மின்விசிறி விழுந்தது: லேசான காயத்துடன் தப்பினார்

தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண் மீது சீலிங் பேன் விழுந்து காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமமூர்த்தி. இவரது மனைவி போதாமணி(26). இவர் கடந்த 1ம்தேதி, அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்ந்துள்ளார். 2ம்தேதி சுகப்பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் மதியம், பிரசவ வார்டில் படுக்கையில் இருந்தபோது, மேலே இருந்த மின்விசிறி திடீரென கழன்று விழுந்தது. இதில் அவரது வலது தொடையில் மின் விசிறியின் இறக்கை பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர்கள் உடனடியாக போதாமணிக்கு சிகிச்சை அளித்தனர். கடந்த 3 நாட்களாக மின்விசிறி அதிக சத்தத்துடன் இயங்கி வந்த நிலையில் திடீரென கழன்று விழுந்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, படுக்கையில் இருந்த குழந்தை தப்பியது….

The post சுகாதார நிலையத்தில் பிரசவித்த பெண் மீது மின்விசிறி விழுந்தது: லேசான காயத்துடன் தப்பினார் appeared first on Dinakaran.

Tags : Anjetti Early Health Station ,
× RELATED உழைப்பாளர் தினம்: தலைவர்கள் வாழ்த்து