×

எதிரிக்கும் வலிக்க வேண்டும் என்ற வெறியுடன் நண்பனின் காரியம் முடிவதற்குள் வாலிபரை தீர்த்துக் கட்டினோம்; ஊத்துக்கோட்டை கொலையில் கைதான மூவர் பகீர் தகவல்கள்

ஊத்துக்கோட்டை: நண்பனின் 16வது நாள் காரியம் முடிவதற்குள் எதிரியை கொலை செய்யவேண்டும் என்று முடிவு செய்து வாலிபரை கொலை செய்தோம் என்று ஊத்துக்கோட்டை கொலையில் பிடிபட்ட மூவர் போலீசில் பகீர் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராபின் (26). இவர் கடந்த 31ம் தேதி இரவு தனது பைக்கில் நண்பர் கமலுடன் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் செல்லும்போது ராபின் வெட்டிக்கொல்லப்பட்டார். ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, தணிகைவேல் ஆகியோர் கொண்ட 5 தனிப்படையினர் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில், ராபின் கொலை தொடர்பாக ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபினின் நண்பர்கள் மற்றும் ராபின் வேலை செய்த இடம், சென்னை சோழவரம், செங்குன்றம் உள்பட பல பகுதிகளை சேர்ந்த ரவுடி கும்பல் மற்றும் கூலிப்படை என்று 25 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சோழவரம் பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற டியோ கார்த்தி (23), மதுரை சரவணன் (26), பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த ராகுல் (26) ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு: கைது செய்யப்பட்ட மேற்கண்ட மூவரின் நண்பர் கானா அபி. இவர் கடந்த மாதம் 22ம் தேதி வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது மரக்காணம் பகுதியில் எங்களது நண்பர் கானா அபியை கொலை செய்தனர். அதற்கு பழிக்குப்பழி வாங்கவே ஊத்துக்கோட்டை பகுதியில் ஒரு வருடத்துக்கு முன் குடியேறிய சென்னை காரனோடை பகுதியை சேர்ந்த மோகன் அல்லது அவரது நண்பர்கள் யாரையாவது கொலை செய்ய திட்டம் தீட்டினோம். நண்பரை இழந்தால் வேதனை தெரியும் என்பதால் மோகனை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்ததுடன் நண்பன் கானா அபியின் 16 நாள் காரியம் முடிவதற்குள் எதிர் அணியில் ஒருவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று நினைத்து சம்பவத்தன்று ஊத்துக்கோட்டை பகுதிக்கு வந்துள்ளனர். மோகனை தேடியபோது அவருடன் நெருக்கமாக பழகி வந்த ராபினை சுற்றிவளைத்து கொலை செய்தோம். ஆனால் கானா அபி கொலையில் ராபினுக்கு எந்தவித தொடர்பு கிடையாது. இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது….

The post எதிரிக்கும் வலிக்க வேண்டும் என்ற வெறியுடன் நண்பனின் காரியம் முடிவதற்குள் வாலிபரை தீர்த்துக் கட்டினோம்; ஊத்துக்கோட்டை கொலையில் கைதான மூவர் பகீர் தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : walibar ,Poothukkotta ,Bakir ,Valibar ,Uthukkotta ,Dinakaran ,
× RELATED மானூர் அருகே வாலிபர் மாயம்