×

பணம் பறிப்பு வழக்கு காவல் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி ஓட்டம்

சென்னை: பணம் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட வழிப்பறி குற்றவாளி ஒருவன், விசாரணையின் போது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவல்லிக்கேணி அசூதிகான் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (40). ஆட்டோ ஓட்டி வருகிறார். ேநற்று முன்தினம் சவாரியை முடித்துகொண்டு பல்லவன் சாலை வழியாக சென்றபோது, 2 பேர் லோகேஷை வழிமறித்து பணம் பறிக்க முயன்றனர். ஆனால் லோகேஷ் பணத்தை தராமல் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றார். ஆனால் விடாமல் துரத்தி லோகேஷை சரமாரியாக தாக்கிவிட்டு அவரிடம் இருந்து பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து லோகேஷ் திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பல்லவன் சாலையை சேர்ந்த தீனா (20), மணிகண்டன் (18) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் 2 பேரையும் பிடித்து, காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, காவல் நிலையத்தில் இருந்த 2 வழிப்பறி கொள்ளையர்களில் மணிகண்டன் மட்டும் திடீரென மாயமானார். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் மற்றொரு வழிப்பறி கொள்ளையனிடம் கேட்டபோது, நீங்கள் வெளியே சென்றதும், அவன் தப்பி ஓடிவிட்டான் என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர். காவல் நியைத்தில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

The post பணம் பறிப்பு வழக்கு காவல் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallikeeni police station ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…