×

ராமரும் சாஸ்தாவும் ஒருவரே!

ராமவதாரமும், சாஸ்தா அவதாரமும் ஒன்றே என்பர். இதை ‘‘ஹரிஹர சமஷ்டி அம்சம்” என்பர். ராமனும் சாஸ்தாவும் வில்லேந்திப் போரிட்டவர்கள். ராமர் முறித்த சிவதனுசில் சாஸ்தாவின் ஆக்ரோஷ சக்தி ஆவாஹனம் செய்யப்பட்டிருந்தது. அதனால்தான் அதை சாதாரணமானவர்களால் முறிக்க முடியவில்லை. ஏன், அசைக்கக்கூட முடியவில்லை. ராமர், சாஸ்தா அவதாரங்கள் இரண்டும் ஒன்றே என்பதால் ராமன் அதை லாவகமாக எடுத்தார். வில்லில் இருந்த சக்தியை தனக்குள் ஆகர்ஷணம் செய்து கொண்டார். இதனால் மாபெரும் வீரன் ராவணனைக் கொல்லும் சக்தியை அவர் ஆரம்பத்திலேயே பெற்றுக் கொண்டார். அதனால்தான், சக்தியை இழந்த வில், ராமன் கை பட்டவுடன் தானாகவே ஒடிந்துவிழுந்தது.

Tags : Rama ,Shasta ,
× RELATED ஸ்ரீ ராம தரிசனம்