×

புதுவண்ணாரப்பேட்டையில் கஞ்சா கடத்தி விற்ற 4 பேர் பிடிபட்டனர்

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் வானமாமலை தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு டோல்கேட் அருகே தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு கையில் பையுடன் சந்தேக நிலையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். அவர்களின் பையை சோதனை செய்ததில், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 1.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த கணேஷ்குமார் (20), காரப்பாக்கம், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த அர்ஜூன்குமார் (24) எனவும், இவர்கள் மணலி புதுநகர், ஆண்டாள் குப்பம் பகுதியில் ஒரு தனியார் கம்பெனியில் வெல்டிங் வேலை செய்தபடி, பீகாரில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து, வடசென்னை பகுதிகளில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, தண்டையார்பேட்டையில் விற்பனை செய்து வந்த, வியாசர்பாடியை சேர்ந்த கிருஷ்ண குமார் (36), ஜோதி (35) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். …

The post புதுவண்ணாரப்பேட்டையில் கஞ்சா கடத்தி விற்ற 4 பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.

Tags : Puduvannarappet ,Thandaiyarpet ,Puduwannarappet ,Inspector ,Vanamamalai ,
× RELATED பூக்கடை பகுதியில் பரபரப்பு...