×

டிரைவிங் லைசென்சுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் பிடிபட்டார்

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் சண்முகம். டிரைவிங் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவரது வாடிக்கையாளர்கள் 3 பேருக்கு, இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக நேற்றுமுன்தினம் துறையூர் அடுத்த கண்ணனூரில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தியை (59) அணுகினார். அப்போது அவர், 3 பேருக்கு லைசென்ஸ் கொடுக்க தலா ரூ.2ஆயிரம் வீதம் எனரூ.6ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி சண்முகம், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.6ஆயிரம் நோட்டுகளுடன் மோட்டார் ஆய்வாளர் அலுவலகத்திற்கு நேற்று சண்முகம் சென்றார். ஆய்வாளர் சத்தியமூர்த்தியிடம் பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சத்தியமூர்த்தியை கைது செய்தனர்….

The post டிரைவிங் லைசென்சுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் பிடிபட்டார் appeared first on Dinakaran.

Tags : Dharayur ,Shanmugam ,Trichy district ,Dinakaran ,
× RELATED துறையூர் அருகே பரிதாபம் தெரு நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு