×

ஒடுகத்தூர் வாரச்சந்தையில் ₹5 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் வாரச்சந்தையில் ₹5 லட்சத்திற்கும் குறைவாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஒடுகத்தூர் பேரூராட்சியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். இங்கு வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க கூட்டம் கூட்டமாக வேன்களில் வியாபாரிகள் வருவார்கள். வெள்ளிகிழமையான நேற்று நடந்த சந்தையில் ஆடுகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. ஆடுகளை வாங்க வியாபாரிகள் ஏராளமானோர் குவிந்தனர். ஆனால், ஆடுகள் குறைந்தே காணப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சந்தை கூடும் இடம் சேறும், சகதியுமாக இருந்ததால் வியாபாரிகள், பொதுமக்கள் நிற்கவே கடும் அவதிப்பட்டனர். இதனால், சாலையில் நின்று வியாபாரம் பாத்ததால் காலையிலேயே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று நடந்த சந்தையில் ₹5 லட்சத்திற்கும் குறைவாகவே ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்….

The post ஒடுகத்தூர் வாரச்சந்தையில் ₹5 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Odugattur ,Varavanthur ,Odugatore Badrakshi ,Odugathur ,Dinakaran ,
× RELATED ஒடுகத்தூர் அருகே பரபரப்பு; பஸ்...