×

பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்ததில் மகன் கண் முன் தாய் பலி

பூந்தமல்லி : சென்னை பெரம்பூர் திருநாவுக்கரசு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பங்கஜம்(40) வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியின் மகன் அருண்(18) சென்னையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், பூந்தமல்லியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு செல்வதற்காக பங்கஜமும், அருணும் பைக்கில் நேற்று சென்றுள்ளனர். இதில், பூந்தமல்லி நெடுஞ்சாலை திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி அருகே வந்தபோது பைக்கின் குறுக்கே திடீரென மாடு ஒன்று ஓடியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் பங்கஜத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் பங்கஜத்தை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். …

The post பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்ததில் மகன் கண் முன் தாய் பலி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Arumugam ,Thirunavukkarasu Street, Perambur, Chennai ,Pankajam ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ