×

மெட்ரோ ரயில் பணியின்போது ராட்சத கிரேன் சரிந்ததால் பரபரப்பு

பெரம்பூர்: சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராஜமங்கலம் ரெட்டேரி மேம்பாலம் அருகே கோயம்பேடு முதல் மாதவரம் வரை பணிகள் நடந்து வருகிறது. ரெட்டேரி சந்திப்பு அருகே நேற்றிரவு 11 மணியளவில் 30 வட மாநில பணியாளர்களுடன் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் சரிந்து பாலத்தில் விழுந்தது. இதில் பாலம் சேதமானது. இதனால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். நல்ல வேளையாக அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மெட்ரோ ரயில் அதிகாரிகள், ஊழியர்கள் உதவியுடன் கிரேனை தூக்கினர். சுமார் 150 டன் எடை கொண்ட ராட்சத கிரேன் சரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது….

The post மெட்ரோ ரயில் பணியின்போது ராட்சத கிரேன் சரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Chennai ,Dinakaran ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது