×

பாதாம் கீர்!

தேவையானவைபாதாம் பருப்பு – 25 சர்க்கரை – 1/4 கிலோ ஏலக்காய் தூள் – சிறிதளவுபாதாம் எஸ்சென்ஸ் – சிறிதளவுபால் – 1 லிட்டர் குங்குமப்பூ – ஒரு சிட்டிகை.செய்முறைவெதுவெதுப்பான பாலில் குங்குமப் பூவை ஊறவைக்கவும். பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பாலை நன்றாக காய்ச்சவும், பால் அரை பங்காக சுண்டியதும் சர்க்கரை சேர்க்கவும். பிறகு பாதாம் விழுதை போட்டு 5 நிமிடம் அடி பிடிக்காமல் கிளறவும் பால் திக்காகும் போது ஏலக்காய் தூள், ஊறவைத்த குங்குமப் பூ சேர்த்து கிளறினால் பாதாம் கீர் ரெடி. பாதாம் பயன்கள்:பாதாம் நமது மூளைக்கு நல்லது. மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மூளையின் செயல்திறனை அதிகரிக்க செய்கின்றன. குழந்தைகளுக்கு தினமும் காலையில் தண்ணீரில் ஊற வைத்த நான்கு பாதாமை கொடுத்து  வந்தால் அறிவாற்றல் அதிகரிக்கும். இதயநோய் உள்ளவர்கள் தினமும் பாதாம் சாப்பிடுவதால் இதய நோய் குணமாகும் மற்றும் இதயநோய் வராமல் தடுக்கும். கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும். பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது. தினமும் பாதாம் சாப்பிடுவதால் தலைமுடி உதிர்வதை தடுக்கலாம். மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. பாதாமை ஊற வைத்து சாப்பிடுவதால் உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்களுக்கு உடல் எடையை குறைக்கிறது. பெண்கள் குழந்தை பெறும் தருணத்தில் பாதாம் உட்கொண்டால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். தோல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் பாதாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பாதாம் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஆண்மையே அதிகரிக்கும். இரத்த அழுத்தத்தினால் அவதி படுபவர்கள் பாதாமை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இரத்த அழுத்தம் படிப் படியாக குறையும். பாதாம் முடி உதிர்வதை தடுக்கிறது….

The post பாதாம் கீர்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...