சென்னை: ஆவடி அடுத்த வீராபுரத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் மற்றும் சவுபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா. இவர், அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு முதல்வரிடம் சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிந்தவுடன் சிறுமி டானியாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி சவீதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மகளின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவியதற்காக முதல்வருக்கு சிறுமி டானியாவின் பெற்றோர் கண்ணீர் மல்க நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுமி டானியாவை மருத்துவமனையில் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். அப் போது, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. எனவே எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம், விரைவில் பள்ளிக்கு செல்லலாம். உனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று முதல்வர் தெரிவித்தார். வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு முதல்வர் பாராட்டுகளை தெரிவித்தார்….
The post முக சீரமைப்புக்கு அறுவை சிகிச்சை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமியிடம் நலம் விசாரித்தார் appeared first on Dinakaran.