×

சர்வாதிகார சக்திகள் தலைதூக்கும் சூழலில் காங். கட்சித் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும்: தி.க. தலைவர் கி.வீரமணி வலியுறுத்தல்..!!

சென்னை: காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு வர ராகுல்காந்தி மறுத்துவிட்டதால் மூத்த தலைவர் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தலைவர் பதவிக்கு கொண்டு வர சோனியா காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும் என கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயகத்துக்கு அறைகூவல் விடுத்து, மதவாத, சர்வாதிகார சக்திகள் தலைதூக்கும் சூழலில் ராகுல்காந்தி தலைமையேற்க வேண்டும். காங்கிரசுக்கு ராகுல் தலைமையேற்க வேண்டும் என்பதே அக்கட்சிக்கு அப்பாற்பட்ட கொள்கையாளர்களின் எதிர்பார்ப்பு என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு புதிய ரத்தம், இளம் ரத்தம், கொள்கை லட்சிய ஊசி மூலம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என கூறிய கி.வீரமணி,  கொள்கைகளை, லட்சியங்களை தெளிவாய் தெரிந்து எதிரிகளை அடையாளம் கண்டிருப்பவர் ராகுல் காந்தி என புகழாரம் சூட்டினார். தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால் ஜனநாயக நெறிப்படி தலைவர் பதவியை ராஜினாமா செய்தவர் ராகுல்காந்தி. வலிமையான தலைமை தேவைப்படும் தற்போதைய காலகட்டத்தில் காங்கிரசுக்கு தலைமையேற்க முழுத் தகுதி உடையவர் ராகுல் எனவும் கி.வீரமணி தெரிவித்திருக்கிறார். …

The post சர்வாதிகார சக்திகள் தலைதூக்கும் சூழலில் காங். கட்சித் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும்: தி.க. தலைவர் கி.வீரமணி வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Kong ,Rahul Gandhi ,T.K. ,President K. Veeramani ,Chennai ,Dravidar Kazhagam ,president ,K. Veeramani ,Congress ,India ,
× RELATED சொல்லிட்டாங்க…