×

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கர்நாடகா மடாதிபதி, 4 பேர் மீது போக்சோ

மைசூரு: கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவில் முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி சுவாமிகள் இருந்து வருகிறார். இந்த மடத்தின் சார்பில் உயர்நிலைப் பள்ளி நடத்தப்படுகிறது. இதில், ஏராளமான மாணவிகள் படிக்கின்றனர். இவர்களில் பலர், மடத்தால் நிர்வகிக்கப்படும் விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், விடுதியில் தங்கியுள்ள 2 மாணவிகளை மடாதிபதி, விடுதி வார்டன் உள்ளிட்டோர் பாலியல் பயன்படுத்தி வந்துள்ளனர். மாணவிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களின் பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது. இதனால், விடுதியில் இருந்து தப்பிய 2 மாணவிகளும், மைசூருவில் உள்ள தனியார் சேவை மையத்துக்கு சென்றனர். மாணவிகளுக்கு அவர்கள் மனநல ஆலோசனை வழங்கியபோது, பள்ளி விடுதியில் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து கூறியுள்ளனர். மடாதிபதி சிவமூர்த்தி ஸ்வாமிகள் தங்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாகவும், அவருக்கு விடுதி வார்டன் உள்பட 5 பேர் உதவி செய்ததாகவும் தெரிவித்தனர். இது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மைசூரு நாசர்பாத் போலீசார் மடாதிபதி சிவமூர்த்தி சுவாமிகள் உள்பட 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது….

The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கர்நாடகா மடாதிபதி, 4 பேர் மீது போக்சோ appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Mysore ,Shivamurthi Swami ,Muruga Monastery ,Chitradurga, Karnataka ,
× RELATED பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக...