×

துபாய் தீவில் ரூ.650 கோடிக்கு பிரமாண்ட பங்களா வாங்கிய அம்பானி: இளைய மகன் ஆனந்துக்கு பரிசு

துபாய்: பாம் ஜூமைரியா தீவில் 80மில்லியன் டாலர் மதிப்பு வில்லாவை முகேஷ் அம்பானியின் ஆர்ஐஎல் நிறுவனம் வாங்கியுள்ளது.உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, சமீப காலமாக வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்து வருகிறார். கடந்தாண்டு லண்டனில் பிரமாண்டமான பண்ணை வீட்டை அவர் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், துபாயிலும் அவர் புதிய சொத்தை வாங்கியுள்ளார். துபாயின் மிகவும் பிரபலமான தீவு பாம் ஜூமைரியா. இது பனை மரம் போன்ற வடிவத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட  தீவாகும். இங்கு முகேஷ் அம்பானி ரூ.650 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களாவை (வில்லா) வாங்கியுள்ளது. தனது இளைய மகன் ஆனந்த்துக்காக இந்தாண்டு தொடக்கத்தில் இதை அவர் வாங்கியுள்ளார்.  முக்கியமான வர்த்தக, சுற்றுலா நகரமான துபாயில் இதுவரை யாரும் வாங்கிடாத வகையில் முதல் முறையாக மிகப்பெரிய தொகைக்கு இதை அவர் வாங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.பாம் ஜூமைரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த வில்லாவில், 10 படுக்கையறைகள் உள்ளன. ஒரு ஸ்பா, உள் மற்றும் வெளிப்பகுதியில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. துபாய் அரசானது தற்போது உலக நாடுகளில் இருக்கும் பிரபலங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது மேலும், வெளிநாட்டினர் சொத்துகளை வாங்குவதற்காக ரியல் எஸ்டேட் விதிமுறைகளையும் பெரியளவில் தளர்த்தியுள்ளது. அம்பானி வாங்கியுள்ள வில்லாவுக்கு அருகில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பேக்ஹாம், அவரது மனைவி உள்ளிட்டோரும் குடியிருப்பை வாங்கி உள்ளனர்….

The post துபாய் தீவில் ரூ.650 கோடிக்கு பிரமாண்ட பங்களா வாங்கிய அம்பானி: இளைய மகன் ஆனந்துக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Ampani ,Dubai ,Anand ,Mukesh Ambani ,RIL ,Palm Jumairiya ,Dubai Island ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...