×

மாட்டுப் பொங்கல் எப்படி கொண்டாட வேண்டும்?

ஆண்டும் பொங்கல் பண்டிகையின் 3வது நாளாக வரும் சிறப்பு வாய்ந்த திருநாள் மாட்டுப் பொங்கல். விவசாயத்தில் உழவர்களுக்கு பக்கபலமாக நின்ற மற்ற உயிரினங்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, குறிப்பாக கால்நடைகளை வழிபடும் பொருட்டு கொண்டாடப்படும் பொங்கல் ஆகும்.
.
எப்படி கொண்டாட வேண்டும்?

சார்வரி வருஷம் தை திங்கள் 2 ஆம் நாள் அதாவது 15.01.2021 வியாழன் கிழமை காலை மணி 6 முதல் 7 க்கு மகரம் லக்கினத்தில் குரு ஓரையில் மாடுகளுக்கு ஜலத்தில் வில்வ இலை, வெட்டிவேர், சிவப்பு பூசணி பூ, புஷ்பம், சங்கராந்தி பொங்கல் பூஜை செய்த புஷ்பம், இவைகளை தண்ணீரில் போட்டு, அதனுடன் பன்னீர் கலந்து குளிப்பாட்டி விட்டு மாட்டுக் கொட்டகை சுத்தம் செய்து கோலமிட்டு மாடுகளை அழகாக அலங்கரித்து காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பொங்கல் வைத்து, பகல் 10 முதல் 11 மணிக்குள் கோ பூஜை செய்வது நன்மை தரும்.

மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள உறவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நிகழ்வு பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது.

Tags :
× RELATED சுந்தர வேடம்