×

உழைப்பின் மூலம் இறைவனைக் காண்பீர்

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

?என் மூத்த மகன் எதிலும் ஒரு ஆர்வம் இல்லாமல் ஏதோ ஒரு உலகத்தில் உலாவிக் கொண்டிருக்கிறான். பிரமை பிடித்தவன்போல் உள்ளான். அவனுக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள்.
- கிருஷ்ணன், கோவை.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் குருபுக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சுக்கிரனும் பூர்வ புண்ய ஸ்தானாதிபதி புதனும் வக்ர கதியில் சஞ்சரிக்கிறார்கள். அத்துடன் குருவும் சனியும் இணைந்திருப்பதோடு மாந்தியுடன் சேர்ந்து சஞ்சரிப்பதும் உசிதமான நிலை அல்ல. அவரது ஜாதகத்தை ஆராயும்போது ஊழ்வினையின் பயனை அவர் இந்தப் பிறவியில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்  என்பதே பலனாக அமைகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு என்பது சிரமத்தை முழுமையாக அனுபவிப்பதே ஆகும். என்றாலும் சிவாலய வழிபாட்டின் மூலமாகவும் சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதன் மூலமாகவும் அதன் வீரியத்தைக் குறைத்துக்கொள்ள இயலும். தினந்தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று பூச்செடிகளை பராமரித்தல், ஆலயத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுதல், அன்னதான வரிசையை ஒழுங்குபடுத்துதல் போன்ற உங்களால் இயன்ற சேவைகளைச் செய்வதோடு மகனையும் இந்தப் பணியில் ஈடுபடுத்த முயற்சியுங்கள்.

?நான் 40 ஆண்டு காலமாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தொழிலில் மிகவும் மந்த நிலை ஏற்பட்டு வருமானம் இன்றி தவிக்கிறேன். வண்டியின் எஃப்.சி., பர்மிட், இன்ஷ்யூரன்ஸ் என எல்லாம் ஒரே நேரத்தில் வந்து என்னை திக்குமுக்காட வைக்கிறது. கடனை அடைக்க முடியுமா? என் வாழ்நாளில் மாற்றம் பிறக்குமா? உரிய வழி கூறுங்கள்.
- லூர்துசாமி, பட்டணம்புதூர்.

70 வயதிலும் ஆட்டோ ஓட்டி உழைத்து சம்பாதிக்கும் உங்களை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி புதன் கடன் மற்றும் வியாதி ஆகியவற்றைப் பற்றிச் சொல்லும் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வாழ்நாள் முழுவதும் கடன்சுமை என்பது இருந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் அதனை கட்டுக்குள் வைத்திருக்கிறீர்கள். கடன்சுமை இருப்பதால் மருத்துவ செலவு என்பது உண்டாகாமல் உடல்நிலை ஆரோக்யமாய் உள்ளது என்பதை நினைத்து நிம்மதி கொள்ளுங்கள். உங்கள் ஜாதகத்தில் தொழிலைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதாலும் அவரது தசையே நடந்து வருவதாலும் வாழ்நாள் முழுவதும் நீங்கள் சொந்தமாக சம்பாதித்து வருவீர்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. குரு தசையின் காலத்தில் நீங்கள் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. தேவாலயம் அல்லது கோவில் வாசலில் ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், தேங்காய், பழம் விற்கும் கடை வைக்கலாம் அல்லது ஆன்மிகம் சார்ந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வகையில் கைடு போன்ற பணியையும் செய்து வரலாம். இந்த வயதில் வந்திருக்கும் குரு தசை ஆனது ஆன்மிகம் சார்ந்த பணிகளில் உங்களை ஈடுபடுத்தி சம்பாத்யத்தைத் தருவதோடு தனது தொழிலின் மூலமாக இறைவனுக்குத் தொண்டு செய்யும் வாய்ப்பினையும் தருகிறது. உழைப்பின் மூலமாகவும் இறைவனைக் காண இயலும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள். பிரதி வியாழன்தோறும் அருகிலுள்ள தேவாலயத்திற்குச் சென்று உங்கள் மதகுருவாக விளங்கும் பாதிரியாரை வணங்கி அவரது ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். வாழ்வினில் முன்னேற்றம் தரும் திருப்பத்தைக் காண்பீர்கள்.

?என் மகள் ஒருதலையாய் ஒரு பையனை நேசித்து அவர் திருமணத்திற்கு மறுத்ததனால் தற்கொலைக்கு முயற்சித்து ஒருவழியாய் காப்பாற்றிவிட்டோம். இன்னமும் அவன் வருவான், அவனையே திருமணம் செய்து வையுங்கள் என்று புலம்பிய வண்ணம் உள்ளார். இதிலிருந்து எவ்வாறு மீட்டுக்கொண்டு வருவது என்று தெரியாமல் தவிக்கும் எங்களுக்கு நல்லதொரு பரிகாரம் சொல்லுங்கள்.
- கணேசன், சென்னை.

அசுவினி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய குரு 3ல் வக்ர கதியில் அமர்ந்துள்ளார். தற்போதைய சூழலில் அவருடைய திருமணம் பற்றிய பேச்சினை எடுப்பது அத்தனை உசிதமில்லை. அவர் விரும்பும் அதே நபரை திருமணம் செய்வதற்கான வாய்ப்பும் இல்லை. இதை அனைத்தையும் மறந்து உத்யோகத்தில் முழு கவனத்தையும் செலுத்த சொல்லுங்கள்.

வீட்டில் அமர்ந்திருக்காமல் நிரந்தர உத்யோகம் பெறுவதற்கான முயற்சியில் இறங்கச் சொல்லுங்கள். அரசு உத்யோகத்திற்கான தேர்வுகளை எழுதவும் அதற்கான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதிலும் கவனத்தை செலுத்துவது நல்லது. உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருப்பது பலத்தினைத் தருகிறது. அத்துடன் பத்தாம் இடத்திற்கு அதிபதி ஆகிய புதன் ஆட்சிபெற்ற சுக்கிரனுடன் இணைந்து பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் நல்ல சம்பாத்யம் என்பதும் உண்டு. அவருடைய ஜாதக பலத்தின்படி 11.08.2021 முதல் உத்யோக ரீதியாக நல்ல நேரம் என்பது துவங்குகிறது.

29வதுவயதில் திருமண யோகம் என்பது கூடிவருகிறது.பெற்றோர் பார்த்து முடிவு செய்யும் திருமணமாகவே இருக்கும். உங்கள் மகளிடம் தினந்தோறும் மாலை வேளையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று அறுகம்புல் சாற்றி வழிபட்டு வரச் சொல்லுங்கள். குழப்பம் நீங்கி மனத்தெளிவு பெறுவார்.

?திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. மருத்துவமும் பார்த்து வருகிறோம். உரிய வழி காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- பொள்ளாச்சி வாசகர்
.
சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் குருபுக்தி நடந்து வருகிறது. அசுவினி நட்சத்திரம், மேஷராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் இருவரின் ஜாதகத்திலும் புத்ர ஸ்தானம் என்பது நன்றாக உள்ளதால் நிச்சயமாக குழந்தைப்பேறு என்பது உண்டு. உங்களுடைய ஜாதகத்தில் புத்ர ஸ்தானம் ஆகிய ஐந்தாம் இடத்திற்கு அதிபதி குரு ஏழில் அமர்ந்திருப்பதோடு சூரியனுடன் இணைந்து அஸ்தமனம் பெற்றுள்ளார். இதனால் குழந்தை பிறப்பில் தாமதம் உண்டாகிறது. உங்கள் மனைவியின் ஜாதகத்தில் ஐந்தாம் பாவக அதிபதி புதன் ஜென்ம லக்னத்தில் சூரியனுடன் இணைந்து அஸ்தமனம் பெற்றுள்ளார். இருவரின் ஜாதகங்களிலும் புத்ர ஸ்தான அதிபதிகள் சூரியனுடன் இணைந்து அஸ்தமனம் பெற்றுள்ளதால் குழந்தை பிறப்பில் தாமதம் உண்டாகி வருகிறது. அதே நேரத்தில் இருவரின் ஜாதக பலத்தின்படி வருகின்ற 12.06.2021 முதல் 06.02.2022ற்குள் கரு உருவாவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பிரதி ஞாயிறுதோறும் அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று காலை வேளையில் நடைபெறும் உஷக்கால பூஜை அபிஷேகத்திற்கு பால் வாங்கித்தந்து நமஸ்கரித்து வாருங்கள். இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பாலினை பிரசாதமாக அருந்தி வருவதும் நல்லது. இயலாத பட்சத்தில் வீட்டுப் பூஜையறையில் சிறிய அளவிலான ஸ்படிக லிங்கம் வாங்கி வைத்து அதற்கு பால் அபிஷேகம் செய்து அபிஷேகம் செய்யப்பட்ட பாலில் சிறிதளவு பிரசாதமாக தம்பதியர் இருவரும் பருகி வாருங்கள். பரமேஸ்வரனின் திருவருளால் இந்த ஆண்டில் பரம்பரை விருத்தியடையக் காண்பீர்கள்.

Tags : Lord ,
× RELATED ஏகலிங்கம்