×

இல்லந் தோறும் தெய்வீகம் கற்பூரத்தின் பயன்கள்

கற்பூரத்தின் தாய்நாடு ஜப்பான், வியட்நாம், சீனா என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இந்தியாவில் அனைத்து கோயில்கள் மற்றும் வீட்டில் ஆன்மிகப் பயன்பாட்டிற்கு கற்பூரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பலன் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். கற்பூரம் என்பது கற்பூர மரத்தின் மரப்பட்டைகளிலிருந்து பெறப்பட்ட இயற்கையான ரசாயன கலவை ஆகும்.

மெழுகு கற்பூர பந்துகள் முதன்மை யாக டெர்பென்ஸ்களால் (தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் கரிம கலவைகள்) உருவாக்கப்படுகின்றன, அந்த டெர்பென்ஸ்கள் தான் கற்பூரத்தின் வலுவான வாசனைக்கு காரணம் ஆகும். இயற்கையில் இந்த டெர்பென்ஸ் என்பது தாவரங்களில் உள்ள இயற்கை பாதுகாப்பு முறையின் முக்கிய பகுதிகள் ஆகும். டெர்பென்சை சாப்பிடும் போது நச்சுத் தன்மை கொண்டிருப்பதால், அதன் நறுமணம் தாவர உண்ணி மிருகங்கள் கற்பூரத் தாவரத்தை சாப்பிடாமல் பாதுகாக்கிறது. ஆனால் கற்பூரத்தினால் அடையக் கூடிய பலன்கள் நிறைய உள்ளன.

அதன் மருத்துவ மற்றும் குணப்படுத்தும் பண்புகளால் கற்பூரம், பாரம்பரிய மற்றும் மேற்கத்திய மருத்துவ அமைப்புகளில் நன்கு அறியப்பட்டுள்ளது. இது சளி நெரிசல், வலி மற்றும் வீக்கம் போன்ற பல்வேறு நிலைமைகளுக்கு நாட்டு மருத்துவ தீர்வு ஆகும். உண்மையில், சில ஆய்வுகள் கற்பூரம் எரிந்த காயங்கள் மற்றும் பூஞ்சை தொற்று ஆகியவற்றை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றன.

60 அடி உயரம் வரை வளரக் கூடிய ஒரு பசுமையான மரம் கற்பூரம். கற்பூர மரங்கள் பூர்வீக காடுகளில் தலை எடுத்து, விரைவாக பரவக் கூடியது. அந்த மரத்திற்கு ஒரு குடை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் வகையில், அதன் கிளைகள் பரவ முற்படுகின்றன. கற்பூர மரம் நீள்வட்ட இலைகள் மற்றும் சிறிய வெள்ளை பூக்களைக் கொண்டுள்ளது. அதன் பழம் வட்ட வடிவமாகவும் மற்றும் பொதுவாக ஊதா நிறத்தில் இருந்து கருப்பு நிறம் வரையிலும் இருக்கும்.

கற்பூரம் ஒரு மரம் மட்டுமல்ல, அது ஒரு எண்ணெய் மற்றும் ஒரு ரசாயன கலவை  ஆகும். ஒரு இரசாயன கலவையாக அதை லாவெண்டர், கற்பூர துளசி மற்றும் ரோஸ்மேரி போன்ற தாவரங்களின் அத்தியாவசிய எண்ணெய்களில் இருந்து பெறலாம்.

கற்பூரத்தின் மருத்துவ குணங்கள்

கற்பூரம், அரிப்பு, தீக்காயங்கள் மற்றும் பூஞ்சை தொற்று போன்ற பல தோல் நிலைகளுக்கு ஒரு செல்லுபடியாகும் தீர்வு ஆகும். இது தோல் வழியாக எளிதில் உறிஞ்சப்பட்டு அதனால் வீக்கம் மற்றும் வலியை ஒழிப்பதில் நன்மை பயக்கக் கூடியது. கற்பூரத்தின் சில குணநலன்களை நாம் இப்போது ஆராயலாம்.

கற்பூரம் காயத்தின் அடிப்படையிலான தோல் அரிப்பினை குறைப்பதாக ஆராய்ச்சி முடிவுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. இது நாட்பட்ட நமைச்சலுக்கு காரணமான, அயனி சேனல் TRP1 இன் செயல்பாட்டை தடுக்கிறது.தோலிற்கு வயதாவதை தடுக்கிறது கொலாஜன் தொகுப்பினை அதிகரிக்கவும் மற்றும் மெல்லிய வரி மற்றும் சுருக்கங்களை குறைக்கவும் கற்பூரம் பரிந்துரைக்கப்படுகிறது. கற்பூரம் தோலிற்கு ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இதனால், அது ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதற்கும் மற்றும் சிறந்த ஆக்ஸிஜன் சப்ளைக்கும் வழிவகுக்கிறது. இந்த செயல்களால் உங்கள் தோல் இளமை மற்றும் புத்துணர்ச்சி பெறுகிறது.

கற்பூரம் இருமலுக்கான சில முக்கியமான மேற்பூச்சு மருந்துகளில் முக்கிய கருப்பொருளாக உள்ளது. கற்பூரத்தை சுவாசிப்பது மூச்சுக் குழாய் பாதையை திறக்க உதவுவதாக நம்பப்படுகிறது.ஆய்வக ஆய்வுகள் கற்பூரம் ஒரு சிறந்த பூஞ்சை எதிர்ப்பு கலவை என்று குறிப்பிடுகின்றன. கற்பூரத்தின் மேற்பூச்சு பயன்பாடு, 48 வாரங்களுக்குள் கால் - ஆணி பூஞ்சையை வெளியேற்றுவதில் பயனுள்ளதாக காணப்படுகிறது.

உயிருள்ள (விலங்கு சார்ந்த) ஆய்வுகள் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கற்பூரத்தின் மேற்பூச்சு பயன்பாடு  தலை பேனை சுத்தம் செய்வதோடு மேலும் அது திரும்ப வராமல் தடுக்க பயனுள்ளதாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறது.கற்பூர அத்தியாவசிய எண்ணெய் மற்றும் கற்பூரம் இயற்கை கொசு விரட்டி பண்புகளை கொண்டிருப்பதாக ஆராய்ச்சி ஆய்வுகள் நிரூபிக்கின்றன. பி- மென்தனே போன்ற உயிரியளவு சேர்மங்கள் கற்பூரத்தில் இருப்பதே இந்த கொசு விரட்டி பண்புகளுக்கு காரணமாக உள்ளது.

நமைத்தல் என்பது உடலில் ஏற்படும் ஒரு அரிப்பு உணர்வினை  குறிக்கும் ஒரு நிலை ஆகும். இதற்கு பொதுவாக சொரிந்து கொள்வதன் மூலம் நிவாரணம் பெறலாம். இதுவரை, இந்த நிலையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எந்தவொரு காரணமும் அல்லது செயல்பாடும் அறியப்படவில்லை. எனவே, இதற்கான தற்போதைய நடப்பு சிகிச்சையில் நோயெதிர்ப்பு சக்திகளாக செயல்படும் அல்லது நரம்பு மண்டலத்தை இலக்காகக் கொண்ட மேற்பூச்சு முகவர்கள் பயன்படுத்தப்படுகிறது. உடலில் உள்ள அயனி சேனலாக இருக்கும்  நாள்பட்ட நமைச்சல் வளர்ச்சிக்கு காரணமான காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அயனி தோல் அரிப்பினை ஏற்படுத்தும் மூளை சமிக்ஞையை தொடங்குகிறது.

ஒரு சமீபத்திய ஆய்வு கட்டுரை TRPA1 தடுப்பு கோட்பாட்டை ஒப்புக்கொள்கிறது. மென்தால் அல்லது கற்பூரத்தின் பயன்பாடு காயத்தின் அடிப்படையிலான நமைச்சல் ஏற்படும்போது குளிர்ச்சியான உணர்வை வழங்குகிறது என்று அதில் மேலும் கூறப்பட்டது. ‘ஜர்னல் ஆஃப் இன்வெஸ்டிகேடிவ் டெர்மட்டாலஜி’ வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, கற்பூரம் TRPA1 என்  செயல்பாட்டை தடுப்பதன் மூலம் அரிப்புகளின் தீவிரத்தை குறைக்கிறது.

 ஆனால் மனிதர்களிடத்தில் கற்பூரத்தின் நமைச்சல் எதிர்ப்பு விளைவுகளின் பாதுகாப்பு மற்றும் மருந்து அளவை நிரூபிக்க எந்த மருத்துவ ஆய்வுகளும் இல்லை. சரும ஒவ்வாமைகள் மற்றும் நோய்த்தொற்றுகள் போன்ற பல்வேறு தோல் நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரியமாக கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சிறந்த வயது எதிர்ப்பு கலவை என்று கருதப்படுகிறது. உண்மையில், கற்பூரம் சுருக்கங்கள் மற்றும் கரும் புள்ளிகள் போன்ற வயதான அறிகுறிகளுடன் போராடும் பல்வேறு கிரீம்கள் மற்றும் லோஷன்கள் தயார் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

 கற்பூரம் சரும செல்களின் வளர்ச்சியை தூண்டுகிறது மற்றும் கொலாஜன் அளவுகளை அதிகரிக்கிறது என்று ஆரம்ப கட்ட ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளன. கொலாஜன் என்பது நம் உடலில் உள்ள சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கும் ஒரு புரதம் ஆகும். மேலும் கற்பூரத்தின் மேற்பூச்சு பயன்பாடு விலங்கு மாதிரிகளில் யு.வி. கதிர்களினால் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது என்று முன்மொழியப்பட்டது.

கற்பூரம் வலிக்கு  நிவாரணம் அளிக்கிறது  கற்பூரம் என்பது பாரம்பரிய மருத்துவத்தில் அறியப்பட்ட ஒரு வலி நிவாரணி (அனால்ஜிசிக்) ஆகும். இது பல்வேறு வலி நிவாரணி கிரீம்கள் மற்றும் லோஷன்களின் முக்கிய  பொருட்களில் ஒன்றாகும். உடலில் உள்ள சிக்னலிங் பாதைகள் குறுக்கிடுவதன் மூலம் கற்பூரம் வலி நிவாரணியாக செயல்படுவதாக ஆராய்ச்சி கூறுகிறது. இந்த பாதைகள் வலி உட்பட பல உணர்ச்சிக் கருத்துக்களுக்கு பொறுப்பு என்று அறியப்படுகிறது. இது கற்பூரத்தின் வலி நிவாரண நடவடிக்கைகளை விளக்குகிறது.

இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் ஆகியவற்றிற்கான கற்பூரம் நாசி மற்றும் மார்பு திணரல் என்பது இருமல் மற்றும் சளி ஆகியவற்றுடன் தொடர்புடைய பொதுவான பிரச்னைகளில் ஒன்றாகும். தற்போதைய சிகிச்சை முறையில் இருமல் அடக்கி மருந்துகள் அல்லது நெரிசல் எதிர்ப்பு (நெரிசலை அகற்றுவது) மருந்துகள் அடங்கும்.

ஒரு ரசாயன கலவையாக கற்பூரம் பல இருமல் மற்றும் நெரிசலுக்கு நிவாரணம் அளிக்க பயன்படுத்தப்படும் மேற்பூச்சு மருந்துகளில் சேர்க்கப்படும் முக்கிய கூறுகளில் ஒன்று ஆகும். இந்த மருந்துகள் குறிப்பாக குழந்தைகளுக்கு இரவு நேர இருமல் மற்றும் நெரிசல் ஆகியவற்றைக் குறைக்க உதவுகின்றன என்பதற்கு சான்றுகள் இருக்கின்றன. மற்றொரு ஆய்வில், கற்பூரத்தை சுவாசிக்கும் பொழுது மூக்கடைப்பு நீங்கி மூக்கு வழியாக மூச்சு விடுவதை அதிகரிக்க முடியும் என்று பரிந்துரைக்கின்றது.

எனினும், ஒரு மார்பு நெரிசல் நீக்கியாக கற்பூரத்தின் சுயாதீன நன்மையை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை.தீக்காயங்களுக்கு கற்பூரம் உயிருள்ள (விலங்கு அடிப்படையிலான) ஆய்வுகள் கற்பூரம் எள் எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பு, இரண்டாம் நிலை தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது என பரிந்துரைக்கிறது. இந்த சூத்திரத்தின் பயன்பாடானது வேகமான சிகிச்சைமுறைக்கு வழிவகுக்கும் என்று மட்டுமல்லாமல், எரிந்த சருமத்தின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாகவும் கூறப்பட்டது.

இந்தியாவில் மேலோட்டமான தீ காயங்களைக் கொண்ட  2000 பேரில் ஒரு தொடர் ஆய்வு (பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது) நடந்து வந்தது. ஆய்வின் முடிவில், தேங்காய் எண்ணெ யுடன் கலந்து கற்பூரத்தைப் பயன்படுத்துவது காயங்களைக் குணப்படுத்துவதில் மற்றும் எரிந்த காயங்களால் ஏற்படும் வலியை குறைப்பதில் குறிப்பிடத்தக்க திறனைக் கொண்டது என தெரிவிக்கபட்டது.

எப்படி கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது மனித  நுகர்வுக்காக  கற்பூரம் விஷமுள்ளதாக கருதப்படுகிறது என்றாலும், கற்பூர தூள் துருவல் (கதா) ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் அதிக கொழுப்புச்சத்து போன்ற பல்வேறு சுகாதார நிலைமைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப் படுகிறது. இது பொதுவாக தொண்டை நெரிசல், சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு  நிவாரணம் பெற பயன்படுத்தும் பல்வேறு கிரீம்கள் மற்றும் லோஷன்கள்  தயாரிக்க பயன்படும் முக்கிய பொருட்களில் ஒன்றாகும்.

கற்பூர எண்ணெ மற்றும் கற்பூரம் ஆகியவை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து பல்வேறு தோல் மற்றும் உச்சந்தலை நிலைமைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகின்றன.கற்பூரத்தின் அத்தியாவசிய எண்ணெய் அதன் ஒரு தூண்டுதல் மற்றும் ஒரு ஆன்டிசெப்டிக் வடிவத்தில் காணப்படுகிறது. கற்பூர மாத்திரைகள் பரவலாக பொதுவான பூச்சிகள் மற்றும் கொசுக்கள் ஆகியவற்றை தடுக்கும் ஒரு பூச்சிக் கொல்லியாக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?