×

திருமணத்திற்கு 6 நாட்களே உள்ள நிலையில் ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை

திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் செண்பகம். இவருக்கு விஜயபாஸ்கர் (30) என்ற மகனும், ஒரு தங்கையும் உள்ளனர். விஜயபாஸ்கர், ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் முகவராக செயல்பட்டு வந்துள்ளார். இவரை நம்பி அப்பகுதியை சேர்ந்த  ஏராளமான பொதுமக்கள் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் முதலீடு செய்த பொதுமக்கள் அவ்வப்போது விஜயபாஸ்கர் வீட்டுக்கு வந்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை கண்ட விஜயபாஸ்கரின் தாய் செண்பகம், கடந்த 9ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து, அவருக்கு 16ம்  நாள் காரியம் நேற்று முன்தினம்  நடந்தது.வரும் 1ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட விஜயபாஸ்கர், பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும், பணம் இல்லாததால் தனது திருமண ஏற்பாடுகளை செய்ய முடியாமலும், தாய் இறந்து போன துக்கத்திலும் மன அழுத்தத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜயபாஸ்கர் நேற்று பிற்பகல் தனது வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் பாலுசெட்டிச்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் விஜயபாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமணத்திற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் நிதி நிறுவன மோசடி காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ஆருத்ரா ஏஜென்ட்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது….

The post திருமணத்திற்கு 6 நாட்களே உள்ள நிலையில் ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Chenbakam ,Kanchipuram District ,Govindavadi Agaram ,Vijayabaskar ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்