×

ஆஹா நன்னாரி வேர்!

நன்னாரி வேர், பொடி ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். பல்வேறு மருத்துவக் குணங்களை கொண்ட அரிய வகை மூலிகை இது. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. உள் உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. வயிற்றுப்போக்கை தணிக்கவல்லது. உஷ்ணநோய்களைப் போக்குகிறது. ஒற்றைத் தலைவலி, செரிமானம், நாட்பட்ட வாதநோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நன்னாரி நல்ல  மருந்தாகும். நன்னாரி வேர் 30 மில்லி அளவுக்கு எடுத்து 150 மில்லி தண்ணீர் சேர்த்து குடித்துவர சிறுநீர் எரிச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு சரியாகும். வெள்ளைப்போக்கு பிரச்னை குணமாகும்.மூட்டுவலியை போக்கக் கூடியது. நன்னாரி சர்பத் 2 ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் சாத்துக்குடி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்துவர வெயிலினால் ஏற்படும் உஷ்ணம் குறையும். பித்தத்தை குறைக்கும். அரை ஸ்பூன் நன்னாரி வேர் பொடியுடன், 20 உலர்ந்த திராட்சை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி இரவு நேரத்தில் குடித்துவர மலச்சிக்கல் சரியாகும்….

The post ஆஹா நன்னாரி வேர்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED நெல்லை மாவட்ட காங்., தலைவர்...