×

எந்தெந்த ராசிக்கு ஏழரைச் சனி? என்னென்ன செய்ய வேண்டும்?

பெருங்குளம் ராமகிருஷ்ணன்

தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை பாதச் சனி தொடங்குகிறது. சனி பகவான் உங்கள் தன, வாக்கு குடும்ப ஸ்தானம் மற்றும் தைரிய ஸ்தானத்திற்கு அதிபதி. அவர் தனது மூன்றாம் பார்வையால் சுக ஸ்தானம் - அஷ்டம ஆயுள் ஸ்தானம் - லாப ஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார். இதே வேளையில் ராசிநாதனான குரு பகவானும் தனது பார்வையை ரண ருண ரோக ஸ்தானம் - அஷ்டம ஆயுள் ஸ்தானம் - தொழில் ஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார்.

ஏழரைச் சனியின் ஜென்ம பாகத்தில் இதுவரை கஷ்டத்தையும் கவலையையும் அதிக அளவில் அனுபவித்த நீங்கள் இனி நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நிம்மதி வந்து சேரும். பொருளாதாரம் சிறக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். உங்களுடைய பலம் என்ன என்பது உங்களுக்கு தெரியவரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான தடைகள் நீங்கும். சகோதர சகோதரிகள் நல்ல இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

எதிலெல்லாம் கவனம் தேவை?

கல்வி சம்பந்தமான விஷயங்களில் அதிக கவனம் அவசியம். வீடு மனை சார்ந்த விஷயங்களில் முயற்சி தேவை. வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நன்மையை கொடுக்கும்.  தாயார் தாய்வழி உறவினர்களுடன் பேசும்போது கருத்து தெரிவிக்கும் போது அதிக கவனம் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வண்டி வாகனங்கள் பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை. வரவுக்கு குறைவிருக்காது என்றாலும் ஆடம்பர செலவுகளையும் அனாவசிய செலவுகளையும் குறைத்துக் கொள்வது நல்லது. புதிய முதலீடுகள் சம்பந்தமான முடிவு எடுக்கும்போது மிகவும் கவனம் அவசியம்.
 
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

நீங்கள் கேது மற்றும் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். நீங்கள் மஹாகணபதி மற்றும் சிவபெருமானை வழிபட்டு வருவதால் நன்மைகள் ஏற்படும். முடிந்தவரையில் பணம் சம்பந்தமான விஷயங்களில் முடிவெடுக்கும் போது அதிக கவனத்துடன் எடுப்பது நல்லது. தினமும் வினாயகர் அகவல் படிப்பது நன்மை தரும். திருப்பட்டூர் பிரம்மா ஆலயத்திற்கு சென்று வருவதால் தடைகள் நீங்கும். ஏழை நோயாளிகளின் மருத்துவத்திற்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் நிம்மதி பிறக்கும்.

உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ஹோரைகள், வளர்பிறையில் பிறந்திருப்பவர்களுக்கு சூரியன், செவ்வாய், குரு -  தேய்பிறையில்  செவ்வாய், சுக்கிரன். எண் கணித முறையில் அதிர்ஷ்டம் கொடுக்கும் எண்கள்: 1, 3, 7, 9. அதிர்ஷ்டம் கொடுக்கும்  திசைகள் -  கிழக்கு, வடகிழக்கு.  அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள் - மஞ்சள், சிவப்பு.
 
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

நீங்கள் சுக்கிரன் மற்றும் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். நீங்கள் மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து வந்தால் சுபநிகழ்வுகள் நடைபெறும். வீடு மனை சம்பந்தமான விஷயங்களில் அதிக கவனம் தேவை. தினமும் மஹாலக்ஷ்மி அஷ்டகம் படிப்பதால் தடைகள் நீங்கும். கீழ்த்திருப்பதி பத்மாவதி தாயார் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வந்தால் பொருளாதாரம் சீராகும். ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் மங்களங்கள் நிலைக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ஹோரைகள், வளர்பிறையில் பிறந்திருப்பவர்களுக்கு செவ்வாய், குரு, சுக்கிரன், தேய்பிறையில்  செவ்வாய், சுக்கிரன். எண் கணித முறையில் அதிர்ஷ்டம் கொடுக்கும் எண்கள்: 1, 6, 9. அதிர்ஷ்டம் கொடுக்கும்  திசைகள் -  மேற்கு, வடகிழக்கு. அதிர்ஷ்டம் கொடுக்கும்
நிறங்கள் - மஞ்சள், வெள்ளை.
 
உத்திராடம் - 1 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்


நீங்கள் சூரியன் மற்றும் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். நீங்கள் சிவ வழிபாடு செய்தால் நிம்மதி பிறக்கும். அரசு சம்பந்தமான விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். தினமும் சிவபுராணம் படித்தால் நன்மைகள் நடக்கும். திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனை செய்து வருவதால் உடல்நலம் சீராகும். முடிந்தவரை வாயில்லா ஜீவன்களுக்கு உணவிடுங்கள். வாழ்க்கை இனிக்கும்.

உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ஹோரைகள், வளர்பிறையில் பிறந்திருப்பவர்களுக்கு சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், தேய்பிறையில்  சூரியன், செவ்வாய், குரு. எண் கணித முறையில் அதிர்ஷ்டம் கொடுக்கும் எண்கள்: 1, 3, 9. அதிர்ஷ்டம் கொடுக்கும்  திசைகள் -  கிழக்கு, தென்கிழக்கு. அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள் - மஞ்சள், சிவப்பு.
 
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை ஜென்ம சனி தொடங்குகிறது. சனி பகவான் உங்கள் ராசி மற்றும் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதி. அவர் தனது மூன்றாம் பார்வையால் தைரிய வீர்ய ஸ்தானம் - சப்தம களத்திர ஸ்தானம் - தொழில் ஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார். இதே வேளையில் ராசியிலிருக்கும் குரு பகவானும் தனது பார்வையை பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் - சப்தம களத்திர ஸ்தானம் - பாக்கியஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார்.

ஏழரைச் சனியின் விரயச்சனி பாகத்தில் இதுவரை சீரான பணவரவு இல்லாமலும் செலவு அதிகரித்தும் சங்கடங்கள் ஏற்பட்டது. உங்களின் உழைக்கும் திறன் அதிகரிக்கும். சுபநிகழ்வுகளில் இருக்கும் தடைகள் அகலும். உங்களின் பலம் உங்களுக்கு தெரிய வரும். எந்த செயலிலும் முழு முயற்சி அவசியம். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.
 
எதிலெல்லாம் கவனம் தேவை?

எந்த செயலிலும் முழுமையான முயற்சிகளும் நேரான கவனமும் நேர்மையும் அவசியம். தவறியும் கூட சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட வேண்டாம். எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கே உள்ள சட்ட திட்டங்களை முழுமையாக கடைபிடிப்பது நன்மை தரும். யாருடைய கட்டாயத்திற்காகவும் முன்பின் தெரியாதவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதும் முன் ஜாமீன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. இந்த வேளையில் உங்கள் செயல்கள்தான் உங்கள் ஏற்ற மாற்றத்தை தீர்மானிக்கும்.  தேவையற்ற கோபத்தை விலக்கி கொள்வது நல்லது. வீண் பகைமை வேண்டாம்.
 
உத்திராடம் - 2, 3, 4 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

நீங்கள் சூரியன் மற்றும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். நீங்கள் சிவபெருமானை வழிபட்டு வருவதால் நன்மைகள் ஏற்படும். முடிந்தவரையில் சோம்பலைத் தவிர்ப்பது நல்லது. மூன்றாம் நபர் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நன்மை தரும். தினமும் சிவபுராணம் படிப்பது நன்மை தரும். திருநள்ளாறு ஆலயத்திற்கு சென்று வருவதால் தடைகள் நீங்கும். கோசாலைகளுக்கு முடிந்தவரை உணவு வாங்கிக் கொடுக்கவும்..

உங்கள் வாழ்க்கையில் கஷ்டமெல்லாம் மறைந்து இஷ்டமெல்லாம் ஈடேறும். உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ஹோரைகள், வளர்பிறையில் பிறந்திருப்பவர்களுக்கு சூரியன், புதன், குரு -  தேய்பிறையில் புதன், வெள்ளி. எண் கணித முறையில் அதிர்ஷ்டம் கொடுக்கும் எண்கள்: 1, 3, 6, 9. அதிர்ஷ்டம் கொடுக்கும்  திசைகள் -  கிழக்கு, தெற்கு.  அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள் - மஞ்சள், சிவப்பு.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

நீங்கள் சந்திரன் மற்றும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். நீங்கள் பெருமாள் வழிபாடு செய்து வந்தால் சுபநிகழ்வுகள் நடைபெறும். அதிக சிரத்தைக்குப் பிறகே பாராட்டும் பெருமையும் கிடைக்கும். தினமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் படிப்பதால் தடைகள் நீங்கும். ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து வந்தால் கஷ்டங்கள் விலகும். பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்..

உங்கள் வாழ்க்கையில் ஏற்றமும் மாற்றமும் வந்து சேரும். உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ஹோரைகள், வளர்பிறையில் பிறந்திருப்பவர்களுக்கு சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், தேய்பிறையில்  சந்திரன், செவ்வாய், சுக்கிரன். எண் கணித முறையில் அதிர்ஷ்டம் கொடுக்கும் எண்கள்: 2, 6, 9. அதிர்ஷ்டம் கொடுக்கும்  திசைகள் -  மேற்கு, தெற்கு. அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள் - வெள்ளை, நீலம்.
 
அவிட்டம் - 1, 2  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

நீங்கள் செவ்வாய் மற்றும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். நீங்கள் முருகன் வழிபாடு செய்தால் ஆரோக்கியம் சிறக்கும். நேரம் தவறாமை மிகவும் முக்கியம். தினமும் கந்த சஷ்டி கவசம் படித்தால் ஆடை ஆபரண சேர்க்கைகள் சேரும். பழனி சென்று முருகனை வழிபட்டால் மதிப்பு அதிகரிக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்து வரவும். வாழ்க்கை ஏற்றம் பெறும். உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ஹோரைகள், வளர்பிறையில் பிறந்திருப்பவர்களுக்கு சூரியன், செவ்வாய், குரு -  தேய்பிறையில்  சூரியன், செவ்வாய், குரு. எண் கணித முறையில் அதிர்ஷ்டம் கொடுக்கும் எண்கள்: 1, 3, 6, 9. அதிர்ஷ்டம் கொடுக்கும்  திசைகள் -  கிழக்கு, தென்கிழக்கு. அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள் - மஞ்சள், சிவப்பு.
 
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை விரயச் சனி தொடங்குகிறது. சனி பகவான் உங்கள் ராசி மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதி. அவர் தனது மூன்றாம் பார்வையால் தனவாக்கு குடும்ப ஸ்தானம் - ரண ருண ரோக ஸ்தானம் - பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார். இதே வேளையில் குரு பகவானும் தனது பார்வையை சுக ஸ்தானம் - ரண ருண ரோக ஸ்தானம் - அஷ்டம ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார்.
 
ஏழரைச் சனியின் விரயச்சனி தொடங்குகிறது. அவர் உங்கள் ராசிக்கு அதிபதி என்பதாலும் இப்போது செல்லக்கூடிய ராசி ஆட்சி வீடு என்பதாலும் சங்கடங்கள் அதிகமாக ஏற்படாது. ஆனாலும் எதிலும் நேர்மை நிதானம் அவசியம். திட்டமிடப்படாத செலவுகள் வரலாம். வரவு சீராக இருக்கும். சேமிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ளவும். ஏற்றத்திற்கும் மாற்றத்திற்கும் உங்கள் செயல்கள் மட்டுமே காரணம் என்பதை உணர்ந்து செயல்படவும். சுபநிகழ்வுகள் உண்டு.
 
எதிலெல்லாம் கவனம் தேவை?

எதிலும் நேரம் தவறாமை அவசியம். முன்கூட்டிய திட்டமிடல் மிகவும் முக்கியம். யாருக்கும் கேட்காமல் ஆலோசனைகளை சொல்ல வேண்டாம். ரகசியங்களை காப்பாற்றுவதில் அதிக கவனம் அவசியம். வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அதிக திட்டமிடல் தேவை. யாருடைய கட்டாயத்திலும் குறுக்கு வழியில் ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம். சட்ட திட்டங்களை மதித்து நடப்பதன் மூலம் நன்மைகள் ஏற்படும். முகஸ்துதிகளை மறந்தும் ஆதரித்து விடாதீர்கள். எந்த சமயத்திலும் புதிய திட்டங்களை ஆலோசிக்காமல் செயல்படுத்தக் கூடாது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் அவசியம்.   
 
அவிட்டம் - 3,4  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

நீங்கள் செவ்வாய் மற்றும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். நீங்கள் முருகன் வழிபாடு செய்தால் உயர்வு ஏற்படும். வாக்கு கொடுக்கும் போது கவனம் அவசியம். தினமும் திருப்புகழ் படித்தால் தடைகள் தகரும். வைத்தீஸ்வரன்கோவில் சென்று வழிபட்டால் செல்வாக்கு அதிகரிக்கும். ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு இயன்ற உதவிகளை செய்து வரவும். வாழ்க்கை பசுமையாக மாறும். உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ஹோரைகள், வளர்பிறையில் பிறந்திருப்பவர்களுக்கு சூரியன், செவ்வாய், குரு -  தேய்பிறையில்  சூரியன், செவ்வாய், குரு. எண் கணித முறையில் அதிர்ஷ்டம் கொடுக்கும் எண்கள்: 1, 3, 6, 9. அதிர்ஷ்டம் கொடுக்கும் திசைகள் -  கிழக்கு, தென்கிழக்கு. அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள் - மஞ்சள், சிவப்பு.
 
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

நீங்கள் ராகு மற்றும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். நீங்கள் பைரவர் வழிபாடு செய்து வந்தால் முக்கிய விஷயங்களில் இருக்கும் தடைகள் நீங்கும். தினமும் பைரவாஷ்டகம் சொல்வதால் முன்னேற்றம் ஏற்படும். திருவண்ணாமலை ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து வந்தால் புதிரான விஷயங்களில் தீர்வு ஏற்படும். பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் வந்து சேரும். உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ஹோரைகள், வளர்பிறையில் பிறந்திருப்பவர்களுக்கு சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், தேய்பிறையில் சந்திரன், செவ்வாய், சுக்கிரன். எண் கணித முறையில் அதிர்ஷ்டம் கொடுக்கும் எண்கள்: 2, 4, 6, 9. அதிர்ஷ்டம் கொடுக்கும்  திசைகள் -  மேற்கு, வடக்கு. அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள் - வெள்ளை, நீலம்.
 
பூரட்டாதி - 1, 2, 3  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

நீங்கள் குரு மற்றும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். நீங்கள் முருகன் மற்றும் சிவன் வழிபாடு செய்தால் மங்களம் உண்டாகும்.  வாகன வசதிகள் கனவு நனவாகும். யாரையும் நம்பும் முன் ஆலோசனை அவசியம். தினமும் வினாயகர் அகவல் படித்தால் எதிரிகள் பலம் குறையும். பிள்ளையார்பட்டி சென்று ஆணைமுகனை வழிபட்டால் பொருளாதாரம் சிறக்கும். முடிந்தவரை தயிர் சாதம் பிறருக்கு விநியோகம் செய்யவும். வாழ்க்கை மணம் பெறும். உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ஹோரைகள், வளர்பிறையில் பிறந்திருப்பவர்களுக்கு சூரியன், செவ்வாய், குரு -  தேய்பிறையில்  சூரியன், செவ்வாய், குரு. எண் கணித முறையில் அதிர்ஷ்டம் கொடுக்கும் எண்கள்: 1, 3, 6, 9. அதிர்ஷ்டம் கொடுக்கும்  திசைகள் -  கிழக்கு, வடகிழக்கு. அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள் - மஞ்சள், சிவப்பு.

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி