×

வளைக்காப்பு நடத்த வற்புறுத்தியதால் 7 மாத கர்ப்பிணி அடித்துக் கொலை

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அற்புதராஜ்(20). இவரது காதல் மனைவி சக்தி(18). இருவரும் சுதாகர் நகரில் உள்ள சக்தியின் தாய் லதா வீட்டில் தங்கி இருந்தனர். தற்போது சக்தி 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். தனக்கு வளைக்காப்பு நடத்த வேண்டும் என தன்னுடைய கணவர் அற்புதராஜிடம் கூறியுள்ளார். ஆனால் அற்புதராஜ் தற்போது கடன் அதிகமாக உள்ளது, அதனால் வளைக்காப்பு நடத்த முடியாது என கூறி வந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று தாய் லதா வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டில் மகள் சக்தியின் முகம், கழுத்து ஆகிய இடங்களில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுது கூச்சலிட்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் சக்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சந்தேகத்தின் பேரில், கணவர் அற்புதராஜை பிடித்து விசாரித்தனர். அப்போது அற்புதராஜ் ஜல்லி கரண்டியால் அடித்து மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் போலீசாரிடம் அவர் கூறியதாவது: மனைவி சக்தி வளைக்காப்பு நடத்த வேண்டும் என தினமும் என்னை தொந்தரவு செய்து வந்தார். நான் அதிகமாக கடன் வாங்கியதால் என்னிடம் பணம் இல்லை என்று கூறி வந்தேன். இந்நிலையில் காலை 10 மணிக்கு எனக்கும் அவளுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த ஜல்லி கரண்டியால் அவள் தலைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக அடித்து தாக்கினேன். அதில் ரத்த வெள்ளத்தில் அவள் மயங்கி கீழே விழுந்து இறந்துவிட்டாள் என்று அற்புதராஜ் கூறியுள்ளார்….

The post வளைக்காப்பு நடத்த வற்புறுத்தியதால் 7 மாத கர்ப்பிணி அடித்துக் கொலை appeared first on Dinakaran.

Tags : Vruthathachalam ,Yumushraj ,Chinnavatavadi ,Cuddalore district ,Shakti ,
× RELATED விருத்தாசலம் அருகே பரபரப்பு எலி...