×

பழநி தண்டாயுதபாணி கோயிலில் இரண்டு நாளில் உண்டியல் வருவாய் ரூ.2.99 கோடி

பழநி: பழநி கோயிலில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் முடிவில் ரூ.2.99 கோடி வசூலாகி இருப்பது கணக்கிடப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் கடந்த இரண்டு நாட்களாக உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி நடந்தது. கோயில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் கடந்த 27 நாட்களில் உண்டியல்கள் வாயிலாக ரொக்க பணமாக ரூ.2 கோடியே 99 லட்சத்து 8 ஆயிரத்து 395 கிடைத்துள்ளது. இதுதவிர தங்கம் 1,182 கிராம், வெள்ளி 12,601 கிராம், மற்றும் 951 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளன.உண்டியல் காணிக்கை எண்ணிக்கையை பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர் லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்….

The post பழநி தண்டாயுதபாணி கோயிலில் இரண்டு நாளில் உண்டியல் வருவாய் ரூ.2.99 கோடி appeared first on Dinakaran.

Tags : Piggal ,Palani Dandaidupani Temple ,Palani ,Palani Temple ,Paranani Mundai Temple ,
× RELATED வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை