×

காஷ்மீர் பற்றி சர்ச்சை கருத்து கேரள எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த முறை பினராய் விஜயன் ஆட்சியில்  உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் ஜலீல். தற்போது எம்எல்வுவாக செயல்பட்டு வருகிறார். கேரள சட்டப்பேரவை குழுவுடன்  சமீபத்தில் காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் செய்த ஜலீல், இந்திய  எல்லையில் உள்ள காஷ்மீரை இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் என்றும், பாகிஸ்தான்  வசமுள்ள காஷ்மீரை ஆசாத் காஷ்மீர்  என்றும் பேஸ்புக்கில் குறிப்பிட்டார். இதுதொடர்பாக டெல்லி போலீசில் புகார்  செய்யப்பட்டது. மேலும், கேரளாவில் பத்தனம்திட்டா நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம்,  ஜலீல் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, ஜலீல் மீது 2 பிரிவுகளில் கேரள போலீசார் ேநற்று வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது….

The post காஷ்மீர் பற்றி சர்ச்சை கருத்து கேரள எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Kerala MLA ,Kashmir ,Thiruvananthapuram ,Jaleel ,Minister of Higher Education ,Vijayan ,Kerala ,MLW ,Dinakaran ,
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!