×

நாய் குறுக்கே சென்றதால் ஓடும் பஸ்சில் திடீர் ‘பிரேக்’ கீழே விழுந்து கண்டக்டர் பலி

சேலம்: காலை அரசு டவுன் பஸ் ஒன்று,செட்டிச்சாவடி, கோம்பைப்பட்டி நோக்கி சென்றது. பஸ்சை டிரைவர் சீனிவாசன் ஓட்டினார். கண்டக்டராக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், அத்தனூரை சேர்ந்த ராஜேந்திரன்(54) இருந்தார். செட்டிச்சாவடி பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கோரிமேடு நோக்கி பஸ் புறப்பட்டது. ராஜேஸ்வரி தோட்டம் என்ற இடத்தில் வந்தபோது, நாய் ஒன்று குறுக்கே வந்தது. உடனே டிரைவர் சீனிவாசன் பிரேக் போட்டுள்ளார். அப்போது பஸ்சின் முன் படிக்கட்டில் நின்றிருந்த கண்டக்டர் ராஜேந்திரன் தூக்கி கீழே வீசப்பட்டார். பஸ்சில் இருந்த பயணிகளும் ஒருவர் மீது ஒருவர் மோதி உள்ளேயே விழுந்தனர். கீழே விழுந்ததில் ராஜேந்திரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினர் ஓடிவந்து அவரை அதே பஸ்சில் ஏற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்துக்கு காரணமான நாயும் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. …

The post நாய் குறுக்கே சென்றதால் ஓடும் பஸ்சில் திடீர் ‘பிரேக்’ கீழே விழுந்து கண்டக்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Salem ,Gombaipatti, Chettichavadi ,Srinivasan ,Namakkal ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்