×

மாற்றுத்திறனாளியை நடுவழியில் இறக்கி விட்ட அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி அடுத்த பேகேப்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (55). மாற்றுத்திறனாளியான இவர் மனைவி வாணிஸ்ரீ(50) மற்றும் மூளை வளர்ச்சியற்ற, நடக்க இயலாத மகன் ஹரிபிரசாத்(16) ஆகியோருடன் அரசு பஸ்சில் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக நேற்று முன்தினம் சென்றார். பஸ்சில் ஏறியபோது கலெக்டர் அலுவலகத்தில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் கிருஷ்ணகிரியை நெருங்கியதும், பஸ் கண்டக்டர் சக்திவேல், இந்த பஸ் கலெக்டர் அலுவலகம் செல்லாது, கீழே இறங்குங்கள் எனக்கூறி நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார். இதையடுத்து  16 வயது மாற்றுத்திறனாளி மகனை தூக்கமுடியாமல் ஒன்றரை கி.மீ., தூரம் தூக்கி வந்து கோபாலகிருஷ்ணன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுதொடர்பாக விசாரித்த போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் மாதேஸ், கண்டக்டர் சக்திவேல் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டனர்….

The post மாற்றுத்திறனாளியை நடுவழியில் இறக்கி விட்ட அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Gopalakrishnan ,Bekepalli ,Hosur Mookandapalli ,Krishnagiri district ,Vanisree ,
× RELATED கெலமங்கலம் அருகே மாட்டுத்தீவனம்...