×

எக்ஸ்போர்ட் கம்பெனியிலிருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பு துணிகள் திருட்டு; டிரைவர் மீது புகார்

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மப்பேடு அடுத்த காந்திப்பேட்டையில் அம்மையப்பர் என்ற தனியார் துணி எக்ஸ்போர்ட் கம்பெனி செயல்பட்டு வருகிறது. காந்திப்பேட்டை கம்பெனியில் இருந்து அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் உள்ள அந்த கம்பெனியின் கிளைக்கு லாரி மூலம் பேண்ட் துணி வகைகளை ஏற்றி அனுப்பி வைப்பது வழக்கம். அந்த லாரியை கடந்த 15 ஆண்டுகளாக காந்திப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கவுரி முருகன் என்ற டிரைவர் ஓட்டிச் செல்வார். ஆனால் காந்திப்பேட்டையில் இருந்து கொடுத்து அனுப்பும் துணியின் எண்ணிக்கையை விட காடுவெட்டியில் இறக்கும் போது உள்ள துணியின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி 566 பேண்ட் துணிகள், மே மாதம் 7ம் தேதி 563 பேண்ட் துணிகள், ஜூலை மாதம் 9ம் தேதி 547 துணிகள் என மொத்தம் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 1676 பேண்ட் துணிகள் குறைவாக ஒப்படைத்து இருப்பதால் அதனை டிரைவர் கவுரி முருகன் தான் திருடியதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து கம்பெனியின் மேலாளர் அருள்ஜோசப் (39) என்பவர் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து கவுரி முருகனை தேடி வருகின்றனர்….

The post எக்ஸ்போர்ட் கம்பெனியிலிருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பு துணிகள் திருட்டு; டிரைவர் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Ammiepar ,Gandhipet ,Kadambadur Union ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்