×

கடன் தொல்லையால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே கடன் தொல்லையால் விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். கல்பாக்கம்  அடுத்த புதுப்பட்டினம் ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி  (27).  இவர், அங்குள்ள அடகு கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.  இந்நிலையில், வேலையில் நின்றுவிட்ட அவர், சில மாதங்களாக வேலையின்றி தவித்து  வந்தார். மேலும் வீட்டின் மீது வங்கி கடன் மற்றும் நண்பர்கள்,  தெரிந்தவர்கள் என பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து,  வங்கி  கடன்தாரர்கள் மற்றும் வெளியில் வாங்கிய கடன்தாரர்கள் என பலர் இவரது கடனை  திருப்பி கொடுக்க வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால், இவர் கடந்த  சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில்,  நேற்று சுந்தரமூர்த்தி  விஷம் அருந்தி வீட்டில்  மயங்கிக் கிடந்தார். இதனை  பார்த்த  குடும்பத்தினர் பதறிப்போய் சதுரங்கப்பட்டினம் அரசு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த  மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து,   தகவலறிந்த கல்பாக்கம் போலீசார், அவரது உடலை, பிரேத பரிசோதனைக்காக  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட  விசாரணையில், அவரது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. கடல் தொல்லையால் இந்த முடிவுக்கு வந்ததாக, அவர் எழுதிய கடித்ததில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து கல்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். …

The post கடன் தொல்லையால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Kalpakkam ,Pudupattinam Rajiv ,
× RELATED கல்பாக்கம் அருகே தாழ்வாக செல்லும்...