×

திருமண வரமருளும் திருமகன்

நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-34

*அருள்மிகு கல்யாண நரசிங்கப்பெருமாள் தேவஸ்தானம், ராமகிரி

பிரகலாதனுக்கு அருளிய ஸ்ரீ நரசிம்மர், கல்யாண நரசிம்மராக இங்கே  திருவருட்பாலிக்கிறார். தட்டை என்றொரு தேசம். இந்த நாட்டை ஆட்சி செய்து வந்த சாமைய நாயக்கர், ஒரு முறை வேட்டையாடச் சென்றார். கூடவே அவரது வேட்டை நாய்களும் அவருடன் சென்றன. அப்போது ஒரு அதிசயம் நடந்தது. திடீரென்று வேட்டை நாய்கள் தாங்கள் மற்ற மிருகங்களைத் துரத்துவதற்குப் பதிலாக பயந்தபடி ஓடி வந்தன. அதைத் துரத்தியதோ ஒரு கீரி. இது எதனால் நடந்திருக்கும் என சிந்தனையில் ஆழ்ந்த மன்னர், அந்த இடத்தை ஆராய உத்தரவிட்டார். அந்த இடத்தில் ‘‘கல்யாண நரசிம்மர்”அருட் பாலித்து வருகிறார் என்று சேவகர்கள்செய்தியைக் கொண்டுவந்தார்கள்.

அன்று இரவு அவர் கனவில் நரசிம்மர் தோன்றித் தனக்கு ஒரு ஆலயம் எழுப்பும்படிச்சொன்னார். அந்தக் கனவை அப்படியே நனவாகச்செய்து லக்ஷ்மிநரசிம்மருக்குப் பெரிய ஆலயம் ஒன்றைக் கட்டினார். இந்த ஆலயத்தின் வயது சுமார் அறநூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். பிராகாரத்துடன் இருக்கும். இந்தக்கோயிலில் தான் கல்யாண நரசிங்கப்பெருமாள் கமலவல்லித்தாயாருடன் அருட்பாலிக்கிறார்.

தீயவர்களையும் அன்பால் திருத்த முடியும். அப்படி அந்த தீயவர்கள் திருந்தாவிட்டால் அவர்களால் ஏதோ ஒரு நன்மை நடக்க இருக்கிறது என்று கருத வேண்டும். நரசிம்ம அவதாரம் ஸ்ரீமகாவிஷ்ணு,  ஏன் நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்று  பொதுவாக பலர் அறிந்த சம்பவம்தான். இரண்யகசிபு தன் வரட்டு கௌரவத்தால் தன் மகன் என்றும் பாராமல் பிரகலாதனை கொன்று விட துணிந்தான். எது நடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் “ஓம் நமோ நாராயணாய” என்று உச்சரித்து கொண்டே இருந்தான் பிரகலாதன். கொடியவனிடம் இருந்து தன் பக்தனான பிரகலாதனை காக்க  ஸ்ரீமந் நாராயணன், நரசிம்ம அவதாரம் எடுத்து வந்து இரண்யனை வதம் செய்தார்.

இரண்யனை வதம் செய்த பிறகும்  நரசிம்மரின் உக்கிரம் (கோபம்) தணியவில்லை. பொதுவாக பெற்றோர், தங்களின் மகனுக்கு குடும்ப பொறுப்பு வர வேண்டும் என்றால், அவன் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை நிறுத்த வேண்டும் என்றால், அவனுக்கு திருமணம் செய்து வைத்தால் அடங்கி விடுவான், பொறுமையும்  கடமையும் அவனுக்கு வந்து விடும் என்று நினைப்பார்கள்.

அதுபோல் நரசிம்மரின் கோபத்தை தணிக்க அவரை குடும்பஸ்தராக ஆக்க வேண்டும் என்பதால்,  இவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி என்ற இரு தேவிகளையும் திருமணம் செய்து வைத்தார்கள் சிவப்பெருமானும், பிரம்மாவும். அதன்படி நரசிம்மரின் ஆவேசம் தணிந்து திருமணம் நடந்த இடம் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கிற ராமகிரி என்கிற இந்த இடத்தில்தான். இங்கு  ஸ்ரீநரசிம்மர், கல்யாண நரசிம்மராக காட்சி தருகிறார். ஸ்ரீதேவியும் பூதேவியும், துர்கா தேவியிடம் சென்று, “உங்கள் சகோதரரின் கோபம் தணிந்திருந்தாலும்,  நீங்களும் எங்களோடு இருக்க வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டதால் துர்காதேவி தன் சகோதரரான ஸ்ரீ நரசிம்மர் இருக்கும் இந்த ஆலயத்திலேயே தங்கிவிட்டாள். அதனால் இங்குள்ள அம்பாள், “ஸ்ரீவிஷ்ணுதுர்கை” என்று அழைக்கப்படுகிறாள்.

இந்த ஊரில் இதன் புராணக்கதையைப் பார்த்தால் உக்கிரமாக வந்த நரசிம்மப்பெருமாள் பின்னால் சாந்தமாக மாறி அருட்பாலித்தார். அதன் காரணம் என்னவென்றால் முதலில் அவரது உக்ரத்தைக் கண்டு பலரும் பயந்து நகர சிறுவன் பிரஹ்லாதன் அமைதியாக கைகளைக் கூப்பியபடி அவரைத் துதித்தான். நரசிம்மர் சிறிது சாந்தமாக முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் அங்கு வந்து வணங்கினர். பின் நரசிம்மர் லக்ஷ்மியை அரவணைத்தபடி காட்சியளித்தார். அந்த நேரத்தில் தேவர்கள் அவரிடம் தங்கள்வேண்டுகோளை வைத்தனர்.

‘‘ஸ்வாமி தங்களை நாங்கள் கல்யாண நரசிங்கப் பெருமாளாகக் காண விரும்புகிறோம் தாங்கள் இந்த இடத்தில் அமர்ந்து சேவை சாதிக்க வேண்டும்” அவர்கள் ஆசையும் நிறைவேறியது. அந்த இடத்திலேயே நரசிம்மரும் அமர்ந்துவிட்டார். அந்த வனப்பகுதியில் “ராமகிரி” யில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் கல்யாண நரசிம்மப் பெருமாளாக அருட்பாலிக்கிறார்.

அவர் திருமுகத்தைப்பார்க்கவே மனதில் ஒரு அமைதியும், ஒருவித பக்தியும் தோன்றி நம்மையறியாமலே நம் கைகளைக்கூப்பி வணங்குகிறோம்.
ஸ்வாதி நக்ஷத்திரம் அன்றும் நரசிம்ம ஜயந்தி அன்றும் மிகவும்  விமரிசையாக இங்கு பூஜைகள் நடை பெறுகிறது. பானகமும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகிறது. நரசிம்மரைத்தொழுதால் சத்ரு பயம், பில்லிசூன்யம் கண்திருஷ்டி போன்றவைகள் அகன்றுவிடும். எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும்.

மூன்று நிலை ராஜகோபுரம்  கம்பீரமாக நிற்க உள்ளே பெரிய பிராகாரத்துடன் இருக்கும் இந்தக்கோயிலில் தான் கல்யாண நரசிங்கப்பெருமாள் கமலவல்லித்தாயாருடன்  அருட்பாலிக்கிறார்.ஆலயம் தோன்றிய சம்பவம்   இந்த ஊரை ஆண்ட சிற்றரசர்  வசந்த கதிரழக நாயக்கர்,  தன் வம்சத்தில் தடைபடும் திருமணம் நடந்தால் கல்யாண நரசிம்மருக்கு ஆலயம் எழுப்புவதாக வேண்டிக்கொண்டார். அவர் வேண்டுதலுக்கு செவி சாய்த்த இறைவன், சிற்றரசரின் இல்லத்தில் கெட்டி மேளம் கொட்ட செய்தார்.

மகிழ்ச்சியடைந்த சிற்றரசர்,  தாம் சொன்னபடி கல்யாண நரசிம்மருக்கு இந்த இடத்தில் ஆலயம் எழுப்பினார். அதுபோல பல சிற்றரசர்களின் வம்சத்தினருக்கும் திருமணம் பாக்கியம் தந்ததால் மகிழ்ந்த சிற்றரசர்கள், இந்த ஆலயத்திற்கு நிறைய திருப்பணிகளை செய்து கோயிலையும் பெரியதாக கட்டினார்கள். தன்னை வணங்கும் பக்தர்களின் இல்லத்திலும் கெட்டி மேளம் கொட்ட அருட்பாலிக்கிறார் ஸ்ரீ கல்யாணநரசிம்மர். அதனால் இந்த ஆலயத்தில் கால் வைத்தாலே தடைபடும் சுபகாரியங்கள் அனைத்தும் ஸ்ரீ கல்யாண நரசிம்மரின் அருளாசியால் இனிதே நடக்கிறது என்று கூறுகிறார்கள் பக்தர்கள். இங்கு உள்ள ஸ்ரீவிஷ்ணுதுர்கைக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றினால் திருமணம் விரைவில் நடக்கும்.

இந்த ராமகிரியில்தான் ஸ்ரீகல்யாண நரசிம்மப்பெருமாள் திருக்கோயில் அமைந்திருக்கிறது. மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்க உள்ளே பெரிய பிராகாரத்துடன் இருக்கும். இந்தக்கோயிலில் தான் ஸ்ரீகல்யாண நரசிங்கப்பெருமாள் கமலவல்லித்தாயாருடன் அருட்பாலிக்கிறார்.அந்த வனப்பகுதியில்  “ராமகிரி” யில்  ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் கல்யாண  நரசிம்மப்பெருமாளாக அருட்பாலிக்கிறார்.அவர் திருமுகத்தைப்பார்க்கவே  மனதில் ஒரு அமைதியும் . ஒருவித பக்தியும் தோன்றி நம்மையறியாமலே நம் கைகளைக்கூப்பிச் சேவிக்கிறோம்.

ஸ்வாதி நக்ஷத்திரம் அன்றும் நரசிம்ம ஜயந்தி அன்றும் மிகவும் பிரமாதமாக  இங்கு பூஜை நடைபெறுகிறது .பானகமும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகிறது .நரசிம்மரைத்தொழுதால்  சத்ரு பயம். பில்லிசூன்யம் கண்திருஷ்டி போன்றவைகள் அகன்றுவிடும். எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும்ராமகிரியில் இருந்துகொண்டு, அனைவருக்கும் சத்ரு பயம் நீக்கும் நரசிம்மர் ஆலயத்துக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த  ஆலயத்தை அடைய நாம்  கரூர் செல்லும் பாதையில் போய்  கோவிலூர்  என்ற ஊரை அடைய வேண்டும். அந்தச்சாலையில் சுமார் இரண்டு கிமீ தூரம் செல்ல “ராமகிரி” என்ற இடம்  வருகிறது.

(தரிசனம் தொடரும்)

தொகுப்பு: பரணிகுமார்

Tags : son-in-law ,bridegroom ,
× RELATED குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என...