×

சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல்: 40 லட்சம் வாடகை பாக்கி

சென்னை: சென்னை பாரிமுனை அருகே ரத்தன் பஜார் மற்றும் பிரேசர் பிரிட்ஜ் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளது. இங்குள்ள ஒரு சில கடைகள் மாநகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதையத்து, நீண்டகாலமாக வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வாடகை பணம் செலுத்தாததால் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் கடைகளில் இருந்து வாடகை வரவில்லை. இதையடுத்து, நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்த 130 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று பூட்டி சீல் வைத்தனர்.வாடகையை வரைவோலையாக சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் செலுத்தும் பட்சத்தில் சீல் அகற்றப்படும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி சென்றனர். மாநகராட்சி அதிகாரிகள் திடீரென வந்து கடைகளை பூட்டி சீல் வைத்து சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

The post சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல்: 40 லட்சம் வாடகை பாக்கி appeared first on Dinakaran.

Tags : 130 Corporation ,Chennai Barimuna ,CHENNAI ,Ratan Bazar ,Fraser Bridge Road ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...