*திருவண்ணாமலையில் உள்ள விநாயகப் பெருமானுக்கு யானை நிறை கொண்ட விநாயகர் என்று பெயர்.
*அம்பாசமுத்திரம் காக்யநல்லூரில் முத்தாண்டிப்புலவர் பாடிய பாடலுக்கு ஏற்ப வயிறு வெடித்ததால் வயிறு வெடித்த பிள்ளையார் எனும் பெயரில் விநாயகர் அருள்கிறார்.
*திருவாவடுதுறையில் திருமாளிகைத் தேவருக்காக கொட்டு சத்தத்தை தவிர்த்த விநாயகர் கொட்டு சத்தம் தவிர்த்த விநாயகர் என்று வணங்கப்படுகிறார்.
*சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி திருத்தலக் கோயிலில் உள்ள விநாயகர் தோகையடி விநாயகராக அருள்கிறார்.
*மயிலாடுதுறைக்கு அருகில் தண்டந்தோட்டம் எனும் இடத்தில் உள்ள விநாயகரை மணிக்கட்டி விநாயகர் என்று வழிபடுகின்றனர்.
*மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் கையில் எழுதுகோலுடன் காட்சி அளிக்கும் விநாயகருக்கு சாட்சி விநாயகர் என்று பெயர்.
*கணபதி குண்டம் என்னும் இடத்தில் கணபதி உருவம் பாணலிங்கம் போல் விளங்குவதால் பாலலிங்க கணபதி என்று அழைக்கின்றனர்.
*மருதங்குடியில் உள்ள பிள்ளையாருக்கு நீளமாக நாக்கு உள்ளதால் நீளநாக்கு பிள்ளையார் என்று பெயர்.
*திருநாட்டியத்தான்குடியில் விரலை நீட்டிய நிலையில் உள்ளதால் கை காட்டி விநாயகர் என்று பெயர்.
*திருச்சி, திருபேரன்பில் திருத்தலத்தில் செவி சாய்த்துக் கேட்குமாறு விநாயகர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறார்.
- டி.பூபதிராவ்