×

3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்கு படையெடுத்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

திண்டிவனம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இவர்கள் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் சென்றதாலும், ஓங்கூர் ஆற்றுப்பாலத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதாலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் தென் மாவட்டங்களுக்கு சென்ற வாகனங்கள் மீண்டும் சென்னைக்கு செல்வதால் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஓங்கூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்க போலீசார் திண்டிவனம் புறவழிச்சாலை அருகே கனரக வாகனங்களை மரக்காணம் மார்க்கமாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருப்பிவிட்டனர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக திண்டிவனத்தில் போலீசார் அனைத்து வாகனங்களையும் மாற்றுப்பாதையில் திருப்பி விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்….

The post 3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்கு படையெடுத்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Independence Day ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...