×

தண்டோரா போடும் பணியாளர்களுக்கு மாற்று பணி ஏற்பாடு

சென்னை: தண்டோரா போடும் பணியில் ஏதேனும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுப்பதை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் அரசாணை: தண்டோரா போடும் நடைமுறை எந்தெந்த துறைகளில் நடைமுறையில் உள்ளதோ அதற்கு முழுமையாக தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. மாற்று ஏற்பாடாக அரசின் முக்கிய செய்திகளை மிக விரைவாக மக்களிடம் சேர்க்கும் விதித்தில் பொருத்தமான வாகனங்களில் ஒலி பெருக்கிகளை பொருத்தி தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் விளம்பரம் செய்வதை நடை முறைப்படுத்தலாம்.தண்டோரா போடும் பணியில் ஏதேனும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுப்பதை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உறுதி செய்ய வேண்டும். மேற்படி தண்டோரா போடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்….

The post தண்டோரா போடும் பணியாளர்களுக்கு மாற்று பணி ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : dandora ,Chennai ,Tandora ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...