×

முருகப் பெருமானின் நாமங்களும் விளக்கங்களும்

 அழகன் - முருகு என்றால் அழகு என்று பொருள். ஆகவே தான் அழகன் என்பதாகும்.
 முருகேசன் - முருகனும் ஈசனும் இணைந்த சொரூபம் முருகேசன்.
 சேயோன் - சேய் என்றால் குழந்தை என்பதாகும். முருகன் குழந்தையாக காட்சி அளிப்பாதால் இந்த பெயர்.
 ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
 குமரன் - குமர பருவத்தில் கடவுளாக எழுந்தருளியிருப்பவன்.
 சுவாமிநாதன் - தந்தைக்கு பிரணவ மந்திரத்தை குருவாக உபதேசம் செய்தவன்.
 கந்தன் - சிவபெருமாளின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிபட்ட தீ பொறி பொற்றாமரை குளத்தில் உள்ள தாமரை மலரின் நடுவே உள்ள கந்தகத்தில் பட்டு குழந்தையாக தோன்றியதால் கந்தன் என்று பெயர் கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.
 சண்முகம் - அன்னை பராசக்தியால் ஆறு உருவமாக இருந்தவன் ஒன்றாக சேர்க்கப்பட்டு ஒரேமுகமாக ஆக்கப்பட்டதால் சண்முகம் என அழைக்கப்பட்டான்.
 தண்டாயுதபாணி - தண்டாயுதத்தை ஏந்தியவன்.
 வடிவேலன் - வேலை ஏந்திய அழகிய முருகனை இத்திருபெயரால் அழைப்பார்கள்.
 சுப்ரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.
 மயில்வாகனன் - மயிலை தனது வாகனமாக கொண்டவன்.
 ஆறுபடையப்பன் - ஆறுபடை வீடுகளைக்கொண்டவன்.
 வள்ளல்பெருமான் - தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருளை கொடையாக வாரி வழங்குவதால் இப்பெயர்.
 சோமாஸ்கந்தர்  தந்தை சிவனுக்கும், தாயார் பார்வதிதேவிக்கும் நடுவே குழந்தை ரூபமாக இருப்பவன்.
 முத்தையன் - முத்துகுமாரசுவாமி, முத்துவேலர்சுவாமி ஆகிய பெயர்களின் சுருக்கமான பெயர் ஆகும்.
 சேந்தன்  ஆறு நபராக இருந்து ஒருவராக சேர்க்கப்பட்டதால் சேந்தன் என பெயர்.
 விசாகன் - முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என பெயர்.
 சுரேஷ் - அழகுக்கு சுரேசன் என்று பொருள். அதுவே சுருங்கி இவ்வாறானது.
 செவ்வேல் - சேவல்வேல் என்பதே மருவி செவ்வேல் ஆனது.
 கடம்பன் - சிவகணங்களில் ஒருவனான கடம்பனை முருகன் தனது உதவியாளனாக சேர்த்து கொண்டதால் இப்பெயர் ஏற்பட்டது.
 சிவக்குமார் - சிவபெருமானின் குமாரன் என்பதால் சிவக்குமார் என்று பெயர்.
 வேலாயுதம்  வேல் தனை ஆயுதமாக கொண்டவன் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
 ஆண்டியப்பன் - ஞானபழம் கிடைக்காமல் ஏமாந்த நிலையில் கோமண ஆண்டியாக நின்றவன்.
 கந்தசாமி - தாமரை மலரின் கந்தகத்தில் இருந்து தோன்றிய தெய்வம் என்பதால் கந்தகடவுள் அல்லது கந்தசாமி என பெயர் ஏற்பட்டது.
 செந்தில்நாதன் - சிந்தனைநாதன் என்பதே மருவி செந்தில்நாதன் ஆக மாறியது.
 மலையாண்டி - பழநி என்னும் மலைமேலே ஆண்டியாய் நின்றதாலே மலையாண்டி எனப்பெயர்.
ஞானபண்டிதன் - ஞான பழத்திற்காக சினம் கொண்டு சென்றவன். அறிவிற் சிறந்தவன். (ஞானம் அறிவு, பண்டிதன் - அனைத்து கலைகளையும் கற்றவன், போதிப்பவன். பிரணவ மந்திரத்தின் பொருளை போதித்ததால் இப்பெயர்).
 வேல்முருகன்  - வேல் தனை கரம் தனில் ஏந்திய முருகன் என்பதாலே வேல்முருகன் என்று அழைக்கப்பட்டான்.
- சு. இளம் கலைமாறன்.

Tags : Muruga ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை