×

சாய் பாபா பிறப்பின் பின்னால் இருக்கும் கதை : சாயின் வாழ்க்கை வரலாறு

சாய் பாபா இந்தியாவில் வாழ்ந்த ஒரு புனித துறவிஆவர் . இவர் வாழ்ந்த காலத்தில் இவரிடம் வந்து பலர் ஆசிபெற்றனர். அவரிடம் வரும் பக்தர்களின் உடல்நலக்குறைவு மற்றும் நோயினை நீக்கும் வல்லமையும் இவரிடம் இருந்ததாக கருதப்படுகிறது. இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் அவரை கடவுளின் அவதாரமாகவே கருதினர்.

கடவுளின் அவதாரமாக சாய் பாபாவை பார்த்த முஸ்லீம் மக்கள் அவரை பிர் [அ] குதுப் ஆக நம்புகின்றனர் . அவர் இறந்தும் இன்றுவரை அவரது வாழ்விடத்தை பார்க்க மக்கள் சீரடிக்கு வந்து தரிசித்து செல்கின்றனர். அவரின் வாழ்க்கை குறிப்புகளை இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

சீரடி சாய் பாபா பிறப்பு :

சீரடி சாய் பாபா அவர்கள் மராட்டிய மாநிலத்தில் பாத்ரி கிராமத்தில் வசித்த தம்பதியான கங்கா பாவத்யா – தேவகிரியம்மா என்பவர்களுக்கு பிறந்தவராக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி சாய்பாபா செப்டம்பர் 28 ஆம் தேதி 1838ஆம் ஆண்டு பிறந்தார். மராட்டிய மாநிலம் அகமது மாவட்டத்தில் உள்ள “சீரடி” எனுமிடத்தில் பிறந்தார்.

பெயர் – சாய் பாபா
பெற்றோர் – கங்கா பாவத்யா – தேவகிரியம்மா
பிறந்த தேதி மற்றும் ஆண்டு – செப்டம்பர் 28, 1838
பிறந்த இடம் – சீரடி

சாய் பாபா பிறப்பின் பின்னால் இருக்கும் கதை :

கங்கா பாவத்யா – தேவகிரியம்மா என்கிற தம்பதி பாத்ரி கிராமத்தில் வசித்துவந்தனர் அவர்கள் இருவரும் தீவிர சிவபக்தர்களாக திகழ்ந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் ஒருநாள் இரவு பலத்த மழை பொழிந்தது. அப்போது படகோட்டியான கங்கா பாவத்ய தனது படகினை பாதுகாக்க ஆற்றங்கரைக்கு சென்றுவிட்டார்.

அப்போது அவரது மனைவி தேவகிரியம்மா மட்டும் இல்லத்தில் தனியாக இருந்தார் . அப்போது அவர்களது வீட்டிற்கு வந்த ஒரு முதியவர் வெளியே பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது அதனால் நான் இன்று இரவு மட்டும் உங்களது வீட்டில் தங்கிக்கொள்கிறேன் என்றார். அதற்கு தேவகிரியம்மா சரி என்று கூறி திண்ணையில் படுத்துக்கொள்ள சொன்னார். பிறகு கதவினை தட்டிய அந்த முதியவர் தனக்கு பசி எடுப்பதாக கூறினார் . அதன்பின் தேவகிரியம்மா அவருக்கு உணவு அளித்தார். அதன் பிறகு தனக்கு கால் வலிப்பதாக கூறினார். அதனால் அவருக்கு கால் பிடித்து விடுவதற்காக ஒரு பெண்ணை அழைத்து வந்தார். வெளியில் இருந்த அந்த இருவர் கடவுள்களான பரமசிவனும், பார்வதியும் ஆவர். அவர்கள் இருவரும் சேர்ந்து கதவினை தட்டி தேவகிரியம்மாவிற்கு காட்சியளித்தனர். பிறகு உனக்கு 3 குழந்தைகள் பிறக்கும் அதில் கடைசியாக நானே பிறப்பேன் என்று ஈஸ்வரன் கூறினார் பிறகு இருவரும் அங்கிருந்து மறைந்தனர்.

அதன்பிறகு வீட்டிற்கு வந்த அவரது கணவரிடம் நடந்ததை கூறினார். இதனை அவர் நம்பவில்லை. பிறகு கடவுள் கூறியபடி அடுத்தடுத்து குழந்தை பிறக்க ஆரம்பித்தது இதன் மூலம் கங்கா பாவத்யா கடவுளின் வருகையை நம்பினார். பிறகு ஈஸ்வரனின் தரிசனம் தனக்கும் வேண்டும் என்று அவர் காட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அப்போது தேவகிரியம்மாவிற்கு மூன்றாவது ஆன் குழந்தை பிறந்தது. அதனை அவர் இலைகளில் சுற்றிவைத்து விட்டு தனது கணவரை பின்தொடர்ந்து சென்றார். பிறகு அந்த குழந்தையை ஒரு முஸ்லீம் கண்டு எடுத்ததாகவும் அவரே 4 ஆண்டுகள் வரை அவரை வளர்த்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. அந்த குழந்தை தான் சாய் பாபா என்று கருதப்படுகிறது.

மகானாக மாறிய சாய் பாபா :

சாய் பாபா அவர்கள் தனது 16ஆவது வயதிலிருந்து துறவு வாழ்க்கையினை மேற்கொண்டார். அப்போது ஒரு நாள் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து இருக்கும்போது மகானாக காட்சியளித்தார். இதனால் அவரிடம் பலர் வந்து தங்களது கஷ்டங்களை கூறி அதற்கான ஆலோசனைகளை பெற்றனர். பிறகு தன்னிடம் வரும் அனைவருக்கும் அவர் தனது ஆலோசனைகளை வழங்கினார். அதன்பின் அவரிடம் வரும் பக்தர்களின் நோய்கள் மற்றும் உடல் சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி அவர்களுக்கு ஆசிவழங்கினார். இதனை கண்ட மக்கள் அவரை கடவுளின் அவதாரமாக தரிசிக்க ஆரம்பித்தனர்.

சாய் பாபா இறப்பு :

சாய் பாபா அவர்கள் 20ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் அனைவரும் அறியும் மகனாக விளங்கினார். பிறகு அக்டோபர் 15ஆம் தேதி , 1918 தேதி இறந்தார். இன்று அவரது சமாதி இருக்கும் சீரடிக்கு இந்தியா முழுவதும் இருந்து மக்கள் வந்து சரிசெய்து செல்கின்றனர். மேலும் பல முஸ்லீம் பக்தர்களும் அவரை தரிசித்து செல்கின்றனர்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?