×

கமுதி அருகே முற்கால பாண்டியரின் நடுகல் கண்டெடுப்பு

கமுதி : கமுதி வட்டத்திற்கு உட்பட்ட முஷ்டக்குறிச்சி கிராமத்தில் பழமையான சிற்பம் ஒன்று இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் வரலாற்று ஆய்வாளர் செல்வம், மற்றும் பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் கடந்த 6ம் தேதி அந்த சிற்பத்தை ஆய்வு செய்தனர்.மேலும் அவர்கள் கூறியதாவது, ‘‘இந்த சிற்பமானது முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்ததாகும். ஒரே பலகைக் கல்லில் புடைப்பு சிற்பமாக வடிக்கும் கலாச்சாரம் தெற்கில் பாண்டிய நாட்டிலும், வடக்கில் பல்லவ நாட்டிலும் பரவி இருந்தது. இந்த நடுகல் அரச மகளிர் அல்லது ஒரு உயர் குடி பெண்ணிற்காக எடுக்கப்பட்டதாகும். பெண்ணின் உருவம் வலது கையில் ஏதோ பொருள் ஒன்றை வைத்துள்ளது போல் செதுக்கப்பட்டுள்ளது.சிற்பம் சிதைவடைந்த நிலையில் இருப்பதால் அது என்ன பொருள் என்று தெளிவாக தெரியவில்லை. அவரின் இடது கை அவரது குழந்தையின் தலையில் கை வைத்து அரவணைப்பது போல் உள்ளது. அவரின் வலது கைக்கு கீழை பெண்மனி ஒருவர் கையில் சாமரம் வீசுவது போல சிற்பம் வடிக்கப்படுள்ளது. அரச மகளிர் அல்லது உயர்குடி பெண்களுக்குத் தான் இதுபோன்ற சிற்பங்கள் வடிப்பது வழக்கம். இவரின் கணவர் போரில் இறந்திருக்கலாம். அல்லது இவரும், இவரது குழந்தையும் ஏதேனும் நோயினால் இறந்திருக்கலாம். அதனால் தான் இவருக்கும், குழந்தைக்கும் மட்டும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.சிற்பத்தை சுற்றிலும் அழகான வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் உயரம் 2.1/2 அடி, அகலம் 1.1/2 அடி. இந்த சிற்பத்தின் காலம் 9 முதல் 10ம் நூற்றாண்டாக இருக்கலாம். இதுபோன்று முற்கால பாண்டியர் சிற்பம் மிகவும் அபூர்வமாகும். இவற்றை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்….

The post கமுதி அருகே முற்கால பாண்டியரின் நடுகல் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Pandiyar ,Kamudi ,Mushthakkurichi ,Kamudi Circle ,Prophet ,Pandier ,Dinakaran ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பேரணி