* மோர்க்குழம்பு வைக்கும்போது அரை நெல்லிக்காய்களை அரைத்துப் போட்டால் சுவை கூடும்.* வறுத்த வேர்க்கடலையை நன்கு பொடித்து மசால்வடை மாவுடன் சேர்த்து வடை சுட்டால் சுவையாக இருக்கும்.* கோதுமை மாவில் ஒரு கைப்பிடி மைதா, ஒரு கைப்பிடி கேழ்வரகுமாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.* ஜவ்வரிசிப் பாயசம் செய்யும்போது 2 ஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கலந்து ஊற்றினால் பாயசம் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்.* புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவில் கலந்து சுட்டால் மணமும் சுவையும் வித்தியாசமாக இருக்கும்.– எம்.வசந்தா, சிட்லபாக்கம்.* வறுத்த புழுங்கல் அரிசியை மாவாக்கி வைத்துக்கொண்டு காய்கறிக்கூட்டு செய்யும்போது கடைசியில் இதை லேசாக தூவி இறக்கினால் மணமாக இருக்கும்.* பருப்பு உருண்டைக் குழம்பு. தயாரிக்கும்போது உருண்டை கரையாமல் இருக்க வேண்டுமானால் ஒரு தேக்கரண்டி அரிசி மாவை உருண்டையுடன் உருட்டிப் போட வேண்டும். * உளுந்தவடைக்கு மாவு ஆட்டும்போது சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து ஆட்டினால் வடை மெதுவாக இருக்கும்.* வாடிய பீன்சை சிறிது நேரம் குளிர்ந்த நீரில் போட்டெடுத்து பிறகு சமையல் செய்தால் பீன்ஸ் பிரெஷ்ஷாக இருக்கும்.* புளித்த தோசை மாவில் சுக்குப்பொடி கலந்து, ஊத்தப்பம் செய்தால் சுவையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமும் ஆகும்.* ரவா உப்புமா மீந்துவிட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடைபோல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க சுவையான வடை தயார். – ஜி.இனியா, கிருஷ்ணகிரி* வெஜிடபிள் சாலட் செய்யும்போது, நீர் அதிகமாகிவிட்டால் நான்கைந்து பிரெட் துண்டுகளை வறுத்து சேர்த்தால் சரியாகிவிடும். சுவையும் நன்றாக இருக்கும்.* மோர்க்குழம்பு செய்து இறக்குவதற்கு முன்னதாக சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் அதன் சுவையே தனி. – சே.தமிழரசி, அயப்பாக்கம்.* மளிகைப் பொருட்களை வாங்கி வந்ததுமே டப்பாக்களில் கொட்டிவிடாமல், சிறிது நேரம் வெயிலில் காயவைத்து சுத்தப்படுத்தி பிறகு டப்பாக்களில் கொட்டி மூடி வைக்கவும். எளிதில் வண்டுகள் வைக்காது. அவசரத்துக்கு சுத்தம் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.* புளி புதியது என்றால் அதை வெயிலில் காய வைத்து, அதிலிருக்கும் தூசு, கொட்டைகளை நீக்கிவிட்டு, ஜாடியில் போட்டு வைக்கவும்.* ரவையுடன் இரண்டு கரண்டி சாதத்தை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கலந்து ரவா தோசை செய்தால் சூப்பராக இருக்கும்.* உருளைக் கிழங்கை நன்றாக மசித்தும் அல்வா செய்யலாம். அதனுடன் சிறிது பாதாம் எஸன்ஸ் சேர்த்தால் உருளைக்கிழங்கு அல்வா பாதாம் அல்வா சுவையில் இருக்கும். – அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி. * வாணலியில் செய்வதைவிட குக்கரில் மூடி போடாமல் உப்புமா செய்தால், கிளறுவதும் சுலபம். எளிதில் அடியும் பிடிக்காது. * பனீர் பட்டர் மசாலா போன்ற கிரேவியில் உப்பு அதிகமானால் வேக வைத்த உருளைக் கிழங்குடன் சிறிது ஃபிரெஷ் க்ரீமை சேர்க்க சுவை கூடும்.– எஸ்.சரோஜா, சென்னை.* புளித்த தோசைமாவில் சிறிதளவு சர்க்கரை கலந்து வார்த்தால், புளிப்புச் சுவை குறைவாக இருக்கும்.* தேங்காய் பர்ஃபி செய்யும்போது சிறிது கடலைமாவு சேர்த்து செய்தால், சுவை பிரமாதமாக இருக்கும்.– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி…
The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.