×

விபத்து வழக்கில் தமிழக போலீஸ் தேடுவதால் புதுச்சேரி பாஜ ஆதரவு: எம்எல்ஏ மகன் மாயம்?

திருபுவனை: புதுச்சேரி மாநிலத்தில் பாஜ ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் (52). இவரது மகன் திலகரசர் (28). தனியார் பஸ்சில் செக்கராக வேலை செய்த அவர், கடந்த 4ம் தேதி மாயமானார். அங்காளன் எம்எல்ஏ புகாரின்படி திருக்கனூர் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.  இதுகுறித்து அவர் வேலை செய்த தனியார் பஸ் நிறுவனத்தில் கிடைத்த தகவல் வருமாறு: திலகரசர் திருக்கனூர்- புதுச்சேரி வழித்தடத்தில் தனியார் பஸ்சில் செக்கராக பணியாற்றியுள்ளார். 2 முறை பஸ்சை ஓட்டியதும், அப்போது செல்லிப்பட்டு, கலித்திரம்பட்டு பகுதியில் விபத்தை ஏற்படுத்தியதில் சிலர் காயமடைந்திருப்பதும் ெதரியவந்தது. கலித்திராம்பட்டு விபத்து தொடர்பாக தமிழக பகுதியான கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணைக்காக திலகரசரை தேடி வந்தனர். இதற்கு பயந்து அவர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு மாநில போலீசாரும் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்….

The post விபத்து வழக்கில் தமிழக போலீஸ் தேடுவதால் புதுச்சேரி பாஜ ஆதரவு: எம்எல்ஏ மகன் மாயம்? appeared first on Dinakaran.

Tags : Puducherry ,BJP ,Tamil Nadu ,MLA ,Mayam ,Thirupuvanai ,Angalan ,Tilakarasar ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை