×

கூலி தொழிலாளி தற்கொலை

ஆவடி: ஆவடியை அடுத்து திருநின்றவூர் நத்தம்மேடு, அண்ணா நகரை சேர்ந்தவர் சுந்தராஜன் (54 ). கூலி தொழிலாளி. இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரை  விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தூங்க சென்றவர். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது, சுந்தராஜன்  பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்தது, தெரிய வந்தது. இது குறித்து திருநின்றவூர்  காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து,  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post கூலி தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Avadi ,Sundarajan ,Tiruninnavur Nathammedu ,Anna Nagar ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...