×

சிறுமியை கடத்தி சென்று திருமணம்; துபாய் வாலிபர் போக்சோவில் கைது

குன்றத்தூர்: மாங்காடு அருகே வசித்து வந்த பெற்றோர் தங்களது 16 வயது மகளை காணவில்லை என கடந்த சில தினங்களுக்கு முன் மாங்காடு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சிறுமி பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்தனர். இதில், காணாமல் போன சிறுமியை தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீ தரன் (27) என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, தஞ்சாவூரில் இருந்த இருவரையும் நேற்று போலீசார் மாங்காடு காவல் நிலையம் அழைத்து வந்தனர். சிறுமியை அழைத்து சென்ற தரன், அவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதால், இந்த வழக்கு போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் ஸ்ரீ தரனிடம் நடத்திய விசாரணையில்,  இன்ஸ்டாகிராம் மூலம் ஸ்ரீ தரனுக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் சிறுமியை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்ற நோக்கில் துபாய்  ஓட்டலில், தான் பார்த்து வந்த வேலையை லீவு சொல்லி விட்டு,   தமிழகத்திற்கு வந்தவர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி, தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து தரனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். துபாயில் வேலை செய்தவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலால் சென்னைக்கு வந்து சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post சிறுமியை கடத்தி சென்று திருமணம்; துபாய் வாலிபர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Dubai ,Boxo ,Kuntharatur ,Mangadu ,Volleyber ,
× RELATED லக்கேஜ்களை மதுரையிலேயே விட்டு விட்டு...