வெந்நீர் அபிஷேகம்
திருவண்ணாமலையில் இருந்து பதினாறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தேவிகாபுரம் இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருட்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணிநேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். இது ராத்திரி அன்று விசேஷ பூஜைகள் உண்டு. இதுபோல பெருமானின் 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்யதேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.
சிவசக்தி லிங்கம்
திருச்சியில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் தஞ்சாவூர் செல்லும் சாலையில் திருவெறும்பூர் தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். லிங்கம் இடதுபுறமாக சாய்ந்து இருக்க லிங்கத்தின் மத்தியில் ஒரு பிளவு காணப்படுகிறது. இது பார்ப்பதற்கு லிங்கம் இரண்டு பகுதியாக இருப்பது போல் தோன்றும். வலதுபுறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடதுபுறம் உள்ள பகுதியை சக்தி அம்சம் என்றும் கூறுகிறார்கள். எனவே இந்த லிங்கத்திற்கு சிவசக்தி லிங்கம் என்றும் பெயருள்ளது. சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கம் உள்ளது. தினமும் சிவலிங்க பூஜை நடைபெறும் போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து வந்து நைவேத்திய பொருட்களை எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது. சிவபெருமானே எறும்பு வடிவில் வருவதாகவும் நம்பப்படுகிறது.
இடம் மாறிய ‘திங்கள்!’
பிறைசூடிய பெருமான் என்ற அடைமொழியுடன் திகழும் சிவபெருமான் இடப்பக்க பிறை நிலா சூடியவன். அர்த்தநாரீஸ்வரராக இருக்கையில் மட்டும் வடப்புறத்தில் நிலவை சூடுவது அதிசயமே!