- ஆவாடி ஆணையர்
- சாண்டிப் ராய் ரத்தோர்
- சென்னை
- ஆவாடி போலீஸ்
- ஆணையாளர்
- சாந்திப் ராய் ரத்தோர்
- செங்கல்பட்டு மாவட்டம்,
- அரசூர் ஊராட்சி
- தின மலர்
சென்னை: ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த அரசூர் கிராமம் பெரியார் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (25). இவர் கடந்த 2ம்தேதி கஞ்சா வைத்திருந்ததாக அம்பத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே மதுராந்தகம் காவல் நிலையத்தில் 2 கஞ்சா விற்ற வழக்குகளும், மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கு உள்ளது. மேலும் பிரபாகரன் நண்பர்களுடன் சேர்ந்து ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கிவந்து அயப்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு விற்றுள்ளார். இதனால் கஞ்சா வியாபாரியான பிரபாகரன் மீது பொருளாதார ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் அவரது வங்கிக்கணக்கு மற்றும் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்….
The post கஞ்சா வியாபாரியின் வங்கி கணக்கு, சொத்தை முடக்க வேண்டும்: ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு appeared first on Dinakaran.