×

தொழில்நுட்ப கோளாறு காரணமாக CUET நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 12,14ம் தேதி களுக்கு ஒத்திவைப்பு

டெல்லி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக CUET நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 12,14ம் தேதி களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தொழில்நுட்ப கோளாறால் 50,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பல்கலைக்களங்களில் இளநிலை படிப்பில் சேர  CUET நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு இந்தாண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்ட தேர்வு நடந்து முடிந்த நிலையில், 2ம் கட்டமாக ஆகஸ்ட்4,5,6,7,8,10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது

The post தொழில்நுட்ப கோளாறு காரணமாக CUET நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 12,14ம் தேதி களுக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : CUET ,Delhi ,Dinakaran ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்