×

ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை!

டோக்கியோ: ஜப்பான் புகுஷிமாவில் 5.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக பெரிய சேதமோ, உயிர் இழப்போ ஏற்படவில்லை. டோக்கியோவில் இருந்து 270 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. கடலுக்கு அடியில் நிலநடுக்கம் 60 கிமீ ஆழத்தில் பதிவாகி உள்ளது.சில இடங்களில் நிலநடுக்கம் 4 ரிக்டர் என்ற அளவில் குறைவாகவும்.. ஒரு சில பகுதிகளில் 7 என்ற அளவில் அதிகமாகவும் நிலநடுக்கம் பதிவானதாக கூறப்படுகிறது.இந்த நிலநடுக்கம் காரணமாக டோக்கியோவில் கடுமையான மின்தடை ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றாலும் கடலுக்கு அருகே இருக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு உள்ளனர்.அதேபோல் நிலநடுக்கம் காரணமாக அங்கு உள்ள செயல் இழந்த டைச்சி அணுமின் நிலையத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. …

The post ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை! appeared first on Dinakaran.

Tags : Fukushima, Japan ,Tokyo ,Japan Meteorological Agency ,
× RELATED ஜப்பானின் புகுஷிமா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!