×

இன்று வசந்த பஞ்சமி.. வசந்த பஞ்சமியின் சிறப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் அறிவோம்

ஒவ்வொரு திதியும் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்ததாக உள்ளத். அந்த வகையில் பஞ்சமி திதியில், வசந்த பஞ்சமி மிக சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதன் முக்கியத்துவம் என்ன என்பதைப் பார்ப்போம்...

பஞ்சமி என்பது மாதந்தோறும், வளர் பிறையில் ஐந்தாம் நாளாகவும், தேய்பிறையில் ஐந்தாம் நாளாகவும் வரும் திதி ஆகும்.

பஞ்சமியில் மிக விசேஷமானது கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி.

தட்சிணாயன காலத்தில், அதாவது ஆவணி மாதத்தில் வளர்பிறை பஞ்சமியில் சூரியன் பயணிப்பார். இதனை கருட பஞ்சமி என்றும், புரட்டாசியில் வரும் வளர்பிறை பஞ்சமிக்கு ரிஷி பஞ்சமி என்றும் பெயர்.அதே போல் உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதிக்கு வசந்த பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது.

வசந்த பஞ்சமியின் சிறப்பு:

இந்த வசந்த பஞ்சமி தினத்தில் தான் பகவான் கிருஷ்ணன், தன் இளம் வயதில் சாந்தீபனி முனிவரிடம் கல்வியை கற்றுக் கொள்ள குருகுல வாசம் தொடங்கிய மிகச்சிறப்பு வாய்ந்த நாளாகும்.

உலகைக் காக்கும் பணியை மேற்கொள்ளும் மும்மூர்த்திகளில் ஒருவரான பகவான் கிருஷ்ணர் எல்லா மாணவர்களைப் போல குருகுல வாசம் சென்று கல்வி கற்ற முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளில் கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை வழிபட்டால், அனைத்து வகை கலைகளும் நம் வசப்படும். ஆன்மிகத்தில் உயர்நிலையை அடையலாம், ஞானம் கிடைக்கும்.

நம் உள்ளத்தில் இருக்கும் அஞ்ஞானம் நீங்கி, ஞான ஒளி தோன்றி வசந்தம் வீசும் என்பது ஐதீகம்.

Tags : Vasantha Panchami ,
× RELATED வாழ்வில் வசந்தம் வீச நாளை வசந்த பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை