×

சென்னை சுற்று வட்டார பகுதிகளில் ஆட்டோ திருடிய 2 பேர் கைது: ஆட்டோ பறிமுதல்

அண்ணாநகர்: சைதாப்பேட்டை தர்மராஜா தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலன் (47), ஆட்டோ டிரைவர். கடந்த 27ம் தேதி இவர், கோயம்பேடு மார்க்கெட் அருகே தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, ஆட்டோ மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர், ஆட்டோவை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இந்த காட்சியை வைத்து, அவர்களை   பள்ளிக்கரணை பஸ் நிலையம் அருகே, ஆட்டோவுடன் மடக்கி பிடித்தனர். விசாரணையில், வடபழனி படவட்டம்மன் கோயில் தெருவை சேர்ந்த சங்கர் (35), குன்றத்தூர் பகுதியை சேர்ந்த இளங்கோ (42) என்பதும்,  இவர்கள் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நிறுத்தப்பட்ட ஆட்டோவை திருடியதும், சைதாப்பேட்டை, பள்ளிக்கரணை மற்றும் மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் ஆட்டோக்களை திருடியதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார்,  அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்….

The post சென்னை சுற்று வட்டார பகுதிகளில் ஆட்டோ திருடிய 2 பேர் கைது: ஆட்டோ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Annanagar ,Singaravelan ,Dharmaraja Street, Saidappet ,Koyambedu Market ,
× RELATED போதை பொருட்களை ஒழிக்க போலீசார் கடும்...