×

இந்தியாவில் ஒரே நாளில் 16,464 பேருக்கு கொரோனா… 39 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 16,464 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,36,275 ஆக உயர்ந்தது.* புதிதாக 39 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,396 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 16,112 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,33,65,890ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.48% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.33% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,43,989 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.*இந்தியாவில் 2,04,34,03,676 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 8,34,167 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது….

The post இந்தியாவில் ஒரே நாளில் 16,464 பேருக்கு கொரோனா… 39 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!! appeared first on Dinakaran.

Tags : India ,Union Health Department ,Delhi ,
× RELATED சமத்துவ இந்தியா உருவாக...