×

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி.20; 90 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி: 2-1 என தொடரை கைப்பற்றியது

சவுத்தாம்டன்: இங்கிலாந்து -தென்ஆப்ரிக்கா இடையே 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி நேற்று சவுத்தாம்டனில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங்செய்த தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 5விக்கெட் இழப்பிற்கு 191ரன் எடுத்தது. ஹென்ரிக்ஸ் 50 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 70, மார்க்ரம் 51(36பந்து), ரிலீ ரோசோவ் 31 (18பந்து), கேப்டன் டேவிட் மில்லர் 22(9பந்து) ரன் எடுத்தனர்.    இங்கிலாந்து பவுலிங்கில் டேவிட் வில்லி 3 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து 16.4 ஓவரில் 101 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 90 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 27, ஜேசன்ராய் 17, கேப்டன் பட்லர் 14, ஜோர்டன் 14 ரன் எடுக்க மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். தெ.ஆப்ரிக்க பவுலிங்கில் தப்ரைஸ் ஷம்சி 5 விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். ஹென்ரிக்சுக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் 2-1 என தென்ஆப்ரிக்கா தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் போட்டி வரும் 7ம் தேதி லார்ட்சில் தொடங்குகிறது….

The post இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி.20; 90 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி: 2-1 என தொடரை கைப்பற்றியது appeared first on Dinakaran.

Tags : England ,South Africa ,Southampton ,T20 ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை