×

செங்கல்பட்டில் ஐ.டி. ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 62 பவுன், 8 கிலோ வெள்ளி, பணம் கொள்ளை: திருப்பதிக்கு சென்றிருந்த நேரத்தில் துணிகரம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 62 பவுன் நகைகள், 8 கிலோ வெள்ளி, ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பதிக்கு சென்றிருந்த நேரத்தில் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (64). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மகன் ஷ்யாம். (36), சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தாமோதரன், தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் திருப்பதிக்கு சென்றார். அங்கு சாமி தரிசனத்தை முடித்து விட்டு இன்று காலை வீட்டுக்கு வந்தனர். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது 2 அறைகளில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 62 பவுன் நகைகள், பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 8 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.46 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் தாமோதரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்….

The post செங்கல்பட்டில் ஐ.டி. ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 62 பவுன், 8 கிலோ வெள்ளி, பணம் கொள்ளை: திருப்பதிக்கு சென்றிருந்த நேரத்தில் துணிகரம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattil ,Tirupati ,Chengalpattu ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!