×

அதிவேகமாக கார் ஓட்டியதை கண்டித்ததால் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல்: 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை; சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

அண்ணாநகர்: அண்ணாநகரில் நள்ளிரவில் அதிவேகமாக கார் ஓட்டியதை கண்டித்ததால் தூய்மை பணியாளர்களை தாக்கிய 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகர் ரவுண்டானா அருகே நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு அதிவேகமாக வந்த ஒரு கார், அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மோதுவதுபோல் சென்றது. இதனால், தூய்மை பணியாளர்கள் கண்டித்துள்ளனர். உடனே, காரை நிறுத்திவிட்டு, அதில் இருந்து இறங்கிய 2 வாலிபர்கள், 2 பெண்கள் தூய்மை பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றியதில் காரில் வந்தவர்கள், பெண் தூய்மை பணியாளர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த அண்ணாநகர் போலீசார், தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அப்போது, போலீசார் முன்னிலையிலேயே அந்த வாலிபர்களும், பெண்களும் தூய்மை பணியாளர்களை அடிக்க பாய்ந்தனர். இந்த சம்பவத்தை பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, தூய்மை பணியாளர்கள் அளித்த புகாரின் பேரில், அண்ணாநகர் போலீசார், அந்த காரை பறிமுதல் செய்து, தூய்மை பணியாளர்களை தாக்கிய நபர்களை  விசாரணைக்கு ஆஜராகும்படி கூறினர். மேலும், இதுதொடர்பாக,  போலீசார் வழக்கு பதிவு செய்து தூய்மை பணியாளர்களை தாக்கிய நபர்கள் போதையில் இருந்தார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்….

The post அதிவேகமாக கார் ஓட்டியதை கண்டித்ததால் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல்: 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை; சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Dinakaran ,
× RELATED போதை பொருட்களை ஒழிக்க போலீசார் கடும்...