×

பள்ளிக்கரணை அருகே தண்ணீர் லாரி மோதி கம்பெனி ஊழியர் பலி

வேளச்சேரி: குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (22). போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், நேற்று கேளம்பாக்கத்தில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்றார். பின்னர், பைக்கில் துரைப்பாக்கம்- பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். பள்ளிக்கரணை அடுத்த சுண்ணாம்பு கொளத்தூர் சாலை சந்திப்பு அருகே  வரும்போது, அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி இவரது பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயேபரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்துக் புலனாய்வு பிரிவு   போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் சந்திரன் (50) என்பவரை கைது செய்தனர்….

The post பள்ளிக்கரணை அருகே தண்ணீர் லாரி மோதி கம்பெனி ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Saradkumar ,Chrompet ,Borur ,Keralambakkam ,Dinakaran ,
× RELATED சென்னையில் அடுக்குமாடி...